பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ஆனந்த முதல் ஆனந்த வர்ை அழிந்துவிடுமோ என்று கருதித் தனியாகப் பங்கிட்டுக் கொண்டார்கள். என் பாட்டனாரும் தன் சொத்தினை இவர்களுக்கிடை இறக்குமுன்பே பாகப் பிரிவினை செய்யும் வகையில் எழுதிவைத்துவிட்டுச் சென்றார்கள். என்றாலும் அவர்கள் பங்கிடும்போது நடைபெற்ற சண்டை சச்சரவுகளுள் பல எனக்கு நினைவில்லை என்றாலும் ஒரு சில இன்னும் நினைவில் இருக்கின்றன. இந்தச் சண்டை சச்சரவுகளைச் சுமார் நூறு வீடுகளுக்கு மேலிருக்கும் எங்கள் ஊரிலுள்ள உறவினரில் ஒருவர்கூடத் தீர்த்து வைக்க முன்வரவில்லை. அதற்கு மாறாக உடன் பிறந்த சகோதரிகளையும் அவர்தம் கணவர்களையும் தூண்டி விட்டு அதனால் தாம் தாம் லாப மடையப் பார்த்தார்கள். பதினைந்து மைல்களுக்கு அப்பால் உள்ள ஓர் உறவினர் வந்து பாகப்பிரிவினை செய்து வைத்தார். இருபது வயதுகூட நிரம்பாத என் அன்னையார் தனிக்குடித்தனம் செய்ய நேர்ந்தது. உடன், என் மீது உள்ள பாசத்தால் என் பாட்டியும் அன்னையின் அத்தையுமாகிய காமாட்சி அம்மாள் எங்களோடு தங்கியிருந்தார்கள். என் தந்தையார் நான் மூன்றாவது பாரம் படித்துக் கொண்டிருக்கும் போது, எனது பதினான்காவது வயதில் மரணமடைந்தார். அவர்கள் தாயாரோடு அடிக்கடி சண்டை இட்டுக்கொண்டே இருப்பார்கள். எனக்கு அப்போதெல்லாம் சிறிது சிறிதாகப் புத்தி தெளிவடைந்த காலமாதலால் அதை யெல்லாம் பார்த்துத் திகைப்பேன்-அழுவேன்-வருந்துவேன். ஆனாலும் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. பக்கத்து வீட்டில் இருந்த பெரியம்மாவோ, பெரியப்பாவோ ன்றித் தெருவிலுள்ள மற்ற பெரிய மனிதர்களோ இந்தச் சண்டை களையெல்லாம் வேடிக்கை பார்ப்பார்களே தவிர சமாதானம் செய்யமாட்டார்கள். பாவம் என் தந்தைக்கு அவர் நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கப் பொருள் வேண்டுமே என்ற பிரச்சினை. என் அன்னைக்கோ உள்ள