பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 41 என்றாலும் அவர்களுக்குள்ளே நடைபெற்ற சண்டைகளும் சச்சரவுகளும்-அப்பப்பா-அளவிறந்தன. துப்பாக்கியால் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொள்ளத் துணை செய்யும் அந்த அளவிற்கு அவர்கள் உறவு முறை வளர்ந்திருந்தது என்ன லாம். அந்த நிகழ்ச்சியின் நினைவுகளைப் பின்னால் பார்க்க லாம். இந்த நிலையில் எனக்கும் அந்த ஊரில் நெருங்கின உறவினர் இரண்டொருவர் இருந்தனர். மற்றெல்லாரும் கூட உறவினர்கள் தாம். ஆயினும் அவர்கள் ஒருவரைப் பற்றி மற்றொருவர் பின்னால் பழித்துரைப்பதும் எதிரில் போற்று வதும் செய்யும் செயல் கண்டால் அன்றைக்கே எனக்கு அருவருப்புத் தோன்றும். பின் திருக்குறளை விளக்கமாகப் படிக்கும்கால் அவர்களது நிலைபற்றி எல்லாம் எனக்கு நன்கு புரிந்தது. எனக்கு நெருங்கிய ஒர் உறவினர் வெளியூரிலிருந்து எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். யாராவது உறவினர் விந்தால் பிள்ளைகளுக்குக் கொண்டாட்டம்தானே. அம்மா அப்பா அடிக்கமாட்டார்கள். புதுத் தின்பண்டங்கள் கிடைக்கும். பெரியவர்கள் கண்ணில் படாமல் சிலகாலம் ஒடி விளையாடலாம். இப்படி நானும் நினைப்பது உண்டுதான். விருந்தாக வந்தவர் ஐம்பது வயதுள்ள மூத்த பெண்மணி. அவர்கள் இன்று இல்லை. அவர்கள் பெயரும் வேண்டாம். அவருக்கு வேறு ஒரு உறவினரும் ஊரில் இருந்தார்கள். அவர்கள் என் அம்மா உடல் நலமாக இல்லை என்று காண வந்தார்கள். அவர்கள் வந்தபோது அம்மா சற்று எழுந்து உலாவும் நிலை பெற்றிருந்தார்கள். காலையில் காப்பி வைப்பது வழக்கம். இந்தக் காலத்துக் காப்பிக்கொட்டைக் காப்பியை நான் இங்குக் குறிக்கவில்லை. சுக்கு மிளகு போட்டு, வெல்லமிட்டுப் பால்விட்டுக் காலையில் நாங்கள் குடிப்பது வழக்கம். இன்றும் காலையில் நான் அந்த வகைப் பானமே அருந்தி வருகிறேன். அன்று அம்மா அதற்கான சுக்கு