பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. நல்லவர் யார்? அந்த இளமையில் எனக்கு எங்கள் தெருவில் நான்கைந்து நண்பர்கள் உண்டு. அவர்களோடு சேர்ந்து ஒடி ஆடி விளை யாடுவது உண்டு. எனக்கு ஐந்து வயது ஆகும் காலத்தில் எங்கள் தெருவிலேயே உள்ள கணக்கப்பிள்ளை ஒருவர் சிறு பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பார். விடியற் காலையில் எழுந்து போக வேண்டும். அவர் அந்தக் காலத்தில் எட்டாவதுவரை படித்த வாத்தியார் போலும், பிள்ளை களுக்கு ஏ பி சி டி சொல்லிக் கொடுப்பவர் அவர்தாம். எனவே அவரை ஏ பி சி டி' வாத்தியார் எனவே அழைத்தார் கள் என நினைக்கிறேன். கணக்கிலும் கீழ்வாய் இலக்கம் முதலிய தமிழ்க் கணக்கு வகையிலும் அவர் கெட்டிக்காரர். விடியற்காலையில் வரச்சொல்லி ஆத்திசூடி முதலியவற்றைப் பழங்கால முறைப்படி முறையம் சொல்லி மனப்பாடம் செய்ய வைப்பார். அவருக்கு மாதத்துக்கு எங்கள் வீட்டில் ஒரு ரூபாய்தான் கொடுப்பார்கள். அப்படி அவரிடம் படிக்கும் காலத்தில் சில பிள்ளைகள் எனக்கு நண்பராயினர். நான் என் தந்தையின் மேற்பார்வையில் இல்லாததாலும், கேட்பாரற்ற பிள்ளையாதலாலும் என்னை அவர்களெல்லாம் எப்போதும் கேலி செய்வார்கள். என் அம்மாவுக்கு இதெல் லாம் தெரிந்தால் விடமாட்டார்கள். அவரவர்கள் பெற்றோ ரிடம் சொல்லி அவர்களின் வாயடக்குவார்கள். என்றாலும் ஒரு சிலர் என்னைத் துன்புறுத்துவதிலே இன்பம் காண் பார்கள். - ஒருநாள் அத்தகைய நண்பர் இரண்டொருவர் என்னை வேடிக்கை பார்க்க ஆற்றங்கரைக்கு அழைத்துச்சென்றார்கள். அந்தக் காலத்திலெல்லாம் நான் ஆற்றுக்குச் சென்று அங்கு மண்லில் சிவலிங்கம் செய்து, பாட்டி கோயிலுக்கு எடுத்துச் சென்ற பூக்களில் மீதி இருப்பவற்றையும் கழித்தவற்றையும்