பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மத்தளத் தட்டு நான் ஊர்ப் பள்ளியிலே நான்காவது ஐந்தாவது படித்துக் கொண்டிருந்த காலம். பள்ளிக்கூட நேரம்போக மாலை வேளையில் நண்பர்களுடன் சில நாட்களில் விளை யாடுவதுண்டு. ஒரு நண்பர் வேடிக்கையாகப் பொழுது போக்கும் விருப்புடையவர். அவருக்கு நாடகம் நடித்தல் முதலியவற்றில் ஆர்வம் உண்டு. அப்படியே புல்லாங்குழல், மிருதங்கம் அல்லது மத்தளம் முதலியன வாசிப்பதில் ஆசை கொண்டவர். அதற்காகச் சிலர் அவருக்கு நண்பரானார்கள். இரண்டொரு மத்தளங்களை வாங்கி வைத்துக் கொண்டு அவர்கள் வீட்டில் வாசிக்கக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். நானும் அவர்களோடு உட்கார்ந்து கொண்டு வேடிக்கையாக அந்த மத்தளம் தட்டுவதைப் பார்த்துக் கொண்டிருப்பேன். நண்பர் சிலர் தேவாரம் முதலியவற்றைப் பாடுவார்கள், எனக்குப் பாடவும் வராது; மத்தளம் தட்டவும் வராது. வேடிக்கையாகத்தான் பார்த்துக் கொண்டிருப்பேன். இப்படிச் சில நாட்கள் நேரம் கழிவது கூடத் தெரியாமல் இருக்கும். வீட்டிலிருந்து என் பாட்டி என்னைத் தேடிக் கொண்டு வருவார். நான் அவர்களோடு போகாவிட்டால் அம்மா அடிப்பார்கள் என்பது தெரியுமாதலால் உடனே ஒடி விடுவேன். என்றாலும் அந்த மத்தளம் அடிப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பதில் தனி மகிழ்ச்சி பெற்றதை இழக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் வருத்தம் தோன்றும். மத்தளம் அடிக்கும் நண்பரும் மற்றவரும் அக்கலையில் வல்ல வர்கள் அல்லர் ஆனாலும் எவ்வாறோ என் பிஞ்சு உள்ளத்தில் அந்தப் பாட்டையும் தட்டையும் கேட்பதில் தனி இன்பம் உண்டாயிற்று. . சில சமயங்களில் நானே மத்தளத்தை வேடிக்கையாகத் தட்டுவதும் உண்டு, அது அலறும். நான் அடிப்பதைப் பொறுக்காமல் அது கத்துவது போல் இருக்கும். நான் பயந்து