பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் கினைவுகள் 63 என்றாலும் தின்னும்போது எத்தனையோ எண்ணங்கள் உள்ளத்தே ஊசலாடின. எனக்குப் புத்தி தெரிந்த அந்த நாளில் எங்களுர்க் கோயில் தர்மகர்த்த'ராக இருந்தவர் நான்கு பேருக்கு மேல் இருப்பர். அவர்கள் ஒருவரும் முன்னை நிலையைவிட மேல் நிலைக்கு வரவில்லையே என்ப தோடு, உள்ள நிலையிலும் தாழ்ந்துதான் போனார்கள். இன்று நன்றாகத் தெளிவுபெற்ற பின் எண்ணிப்பார்த்தேன். ஆம்! உள்ளுரிலும் வெளியூரிலுமிருந்து சுமார் பத்துப்பேர் தர்மகர்த்தர்களாக வேலை பார்த்திருக்கிறார்கள். ஒரு வராவது மேலே உயரவில்லை. உள்ள பொருளையும் நிலத்தையும் இழந்து கடன்காரர்களாக இருப்பதைத்தான் காண்கிறேன். இறைவனுக்கு உண்டான பொருளைக் காப்பதாகச் சொல்லிக் கொண்டே அதைச் சுரண்டும் எலிகளாக மாறிவிட்டால் அவர்கள் வாழ்வு எப்படி உயரும்? தர்ம கர்த்தராக இருந்தவர் குடும்பங்களும் வேலை பார்த்த வர்கள் குடும்பங்களும் நிலையில் தாழ்ந்தே இருக்கின்றன என்பதை ஊரில் யாரும் அறிவார். அதனாலேயே தற்போது உள்ளவரை நான் நீ தர்மகர்த்தாவாக இராதே. வேண்டு மானால் செயலாற்றும் அலுவலராகப் (Executive Officer) பணியாற்று. தர்மகர்த்தாக்களோ, அன்றி அறநிலையப் பாதுகாப்பாளரோ செய்ய வேண்டும் எனப் பணித்ததைச் செய். வேறு செய்யாதே' என்று வற்புறுத்துவேன். அவரும் இன்று தர்மகர்த்தராக இல்லை. கையில் உள்ள பொங்கலோடு பல சிந்தனைகள் என் உள்ளத்தில் தோன்ற ஆற்றுக்கால்வாய்க் கரையில் உட்கார்ந் திருந்தேன். நண்பனோ பொங்கலைச் சாப்பிட்டுவிட்டு "மிகவும் நன்றாக இருக்கிறது. என்றான். என் பிஞ்சு உள்ளமும் அதைச் சுவை பார்க்க நினைத்தது. சுவைத்தேன். நல்ல நெய், தேன், கற்கண்டு, திராட்சை இவற்றில் மூழ்கி எழுந்த அந்தச் சர்க்கரைப் பொங்கல் மிகவும் இனித்தது.