பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 75 மாலை ஐந்து மணிக்குக் கண்விழித்தேன். எதிரில் என். வகுப்பில் படிக்கும் தங்கவேலு என்ற எங்கள் ஊர் மாணவன் நின்று கொண்டிருந்தான். பக்கலில் அம்மா பரிவோடு அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். தங்கவேலு பள்ளியில் நடந்த எல்லாக் கதையையும் சொல்லிவிட்டு, நான் எடுத்து வராது விட்டிருந்த நூல்களையும் கொண்டு வந்து கொடுத்தான். எல்லாவற்றையும் கேட்டறிந்த தாயாருக்கு அந்த ஆசிரியர் மீது கோபம் வந்தது. எதிரில் இருந்திருந்தால் இரண்டு அடிகூடக் கொடுத்திருப்பார்கள். அப்போதும் வீங்கி இருந்த என் கன்னத்தைக் கையால் தடவினார்கள். அவர்தம் கண்கள் நீரைச் சொரிந்தன. படிப்பு இல்லாவிட்டாலும் கவலையில்லை. இனி நீ பள்ளிக்கூடம் போய் இப்படி அடிபட வேண்டாம் என்று சொல்லி, தங்கவேலுவிடம் நாளையிலிருந்து நான் பள்ளிக் கூடம் வரமாட்டேன் என்பதையும் கூறி அனுப்பி விட் டார்கள். நான் செய்வதறியாது திகைத்தேன். என்றாலும் என் அம்மா சொன்னதை யாராலும் மாற்ற முடியாது. ஆதலால் மறுநாளில் இருந்து பள்ளிக்கூடம் கிடையாது என்பதை உறுதி செய்து கொண்டேன். நான்கைந்து நாட்கள் ஓடிவிட்டன. ஒருநாள் மாலை அதே தாடிப் பெரியவர், அடித்த ஆசிரியரும் வேறு இரண் டொருவரும் கூடவர என் வீட்டிற்கு வந்தார். வந்து என்னை அழைத்தார். நான் உள்ளே ஒளிந்து கொண்டேன். அவர் அங்கும் வந்து என்னை இழுத்து அணைத்துக் கொண்டார். நான் ஓவென்று அழுதே விட்டேன். அவர் என் கண்ணைத் துடைத்துத் தேற்றினார். அம்மா ஏதோ சொல்ல ஆரம்பித் தார்கள். அருகிலிருந்த பாட்டி அம்மாவைப் பேசவேண்டாம் என்று அமர்த்தினார்கள். அம்மா பேச ஆரம்பித்தால் ஏதாவது அதிகமாகப் பேசி அவர்கள் மனத்தைப் புண்படுத்தி விடுவார்களோ என அஞ்சினார்கள். அதையெல்லாம் அறிந்த