பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ஆனந்த முதல் ஆனந்த வரை பெரியார் அவர்கள் தாமே பேச ஆரம்பித்தார்கள். அம்மா! எல்லாம் எனக்குத் தெரியும். பரமசிவம் நல்ல பிள்ளை. இதோ இந்த வாத்தியார் தான் தெரியாது அடித்து விட்டார். அவரும் இளையவர்; என் தம்பிதான்; ஏதோ எப்படியோ நடந்துவிட்டது. கன்னம் வீங்கியதை அறிந்தேன்’ என்றார். அப்போது அவர் கை என் கன்னத்தைத் தடவிக் கொடுத்தது. ‘இனிமேல் ஒன்றும் நடக்காது. நான் பார்த்துக் கொள்ளு கிறேன். நாளை பரமசிவத்தை அனுப்புங்கள்' என்றார். ஆம்! அவர் அன்றும் இன்றும் அன்புகுழையப் பரமசிவம்’ என்று தான் அழைப்பார். நான் அம்மா என்ன சொல்வார்களோ என்று அவர்கள் முகம் நோக்கிக் கொண்டிருந்தேன். அவர்கள் முடிவை மாற்ற முடியாதே' என்றாலும் தன் மகன் படிக்க வேண்டும் என்று ஆசை இராதா? ஆழ்ந்த யோசனையில் இருந்தார்கள். அமைதி நிலவியது. பாட்டி அமைதியைக் கலைத்தார்கள்! ஏன், சும்மா இருக்கிறாய். நாளை அனுப்பு வதாகச் சொல்' என்றார்கள். அம்மாவும் நாளை அனுப்பு கிறேன்’ என்றார்கள். அவர்கள் சென்றுவிட்டார்கள். தொடர்ந்து நானும் பள்ளி சென்றேன். பிறகு அந்த ஆசிரி யரிடமும் முறையாகப் பயின்றேன். அன்று முதலியார் அவர்கள் தாமே வலிய வந்து என்னை அழைத்துப் பள்ளியில் சேர்த்திருக்காவிட்டால் நான் எப்படி இருப்பேனோ! 'தானே வந்தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும், வான்வார் கழல்’ என்ற மணி மொழியார் ஆண்டவனை நோக்கிப் பாடிய அடி இதோ என் உள்ளத்தில் ஊசலாடுகிறது. அந்த உணர்ச்சியோடு அன்று நடந்த மாற்றத்தால் இன்று நான் பெற்ற பயனை எண்ணி நிற்கின்றேன்.