பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. நிலப் போட்டி ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண் டாட்டம் என்பது பழமொழி. வீடு இரண்டு பட்டால் ஊரா ருக்குக் கொண்டாட்டம்' என்பது இளமையில் நான் கற்ற புதுமொழி. எங்கள் வீட்டில் என் தாயாரும் பெரியம்மாவும் வேறுபட்டதே ஊரில் சிலருக்குக் கொண்டாட்டமாக அமைந்தது. எங்கள் ஊரின் பக்கத்தில் இருப்பது நெய்க்குப்பம் என்ற சிறிய கிராமம். அது பிராமணர்களுக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன் பிரம்ம தேயமாகக் கொடுத்த ஊர் போலும். எனவே அது சுரோத்திரியம்’ என்ற பெயரால் வழங்கப்பெற்று வந்தது. சில ஆண்டுகளுக்கு முன் அதில் வாழ்ந்த அந்தணர் பலர் தத்தம் நிலத்தை விற்றுவிட்டார்கள். எங்களுரில் சிலர் அவற்றை வாங்கிக் கொண்டார்கள். என் பாட்டனாரும் அதில் ஒரு பங்கு பெற்றார். நான் இளை யவனாயிருந்த பொழுது அந்நிலத்தை என் தாயாரும் பெரியம் மாவும் பங்கிட்டுக் கொண்டு அனுபவித்து வந்தார்கள். நான் வாலாஜாபாத்தில் படித்துக் கொண்டிருந்தபொழுத அந்த ஊரில் மற்றொரு நிலப்பகுதி விலைக்கு வந்தது. அதில் உண்டான போட்டியை நினைத்தாலும் நெஞ்சம் துண்ணென் கின்றது. எனது வீட்டில் சற்று மாறுதல் காணப்பட்டது. எங்களை யெல்லாம் விட்டு வேறு எங்கேயோ சென்றிருந்த தந்தையார் அப்போது மறுபடியும் வீட்டில் வந்து இருந்தார். அவர் வீட்டில் இருந்த நாளிலெல்லாம் எனக்கு வேண்டிய பாடங் களைக் கற்றுக் கொடுப்பார். என் தாயாருடன் மாறுபட்டிருந்த பெரியம்மாவும் இப்போது பேசிக் கொண்டி ருந்தார்கள். அவர்கள் எங்கள் வீட்டுக்கு வருவார்கள் என்றாலும் அம்மா அவர்கள் வீட்டுக்குச் செல்வதில்லை என நினைக்கிறேன். இப்படி ஒரு சிறு நல்ல மாறுதல் குடும்பத்தில் ஏற்பட்ட காலத்தில்தான் அந்த நிலப் போட்டிச் சண்டை உண்டாயிற்று.