பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 83 பெரிய தந்தையார் ஒரளவுக்கு எங்கள் குடும்பத்தை மேல் பார்த்தார் என்று சொல்லலாம். என்றாலும் அவ்வளவு ஆழ்ந்து பற்றுடன் கவனித்தார் என்று சொல்ல முடியாது. என் அன்னையாரோ கைம்மைக்கோலத்தோடு காட்சி அளித்தார். நான் சிந்தை தடுமாறினேன். அந்த ஆண்டில் போட்டியில் பெற்றுக்கொண்ட நிலத்தில் விளைந்த நெல்லைப் பெரியம்மா எங்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அதற்குப் பிறகு என் இரு அன்னையர்தம் குடும்பங்களும் பிரியவே இல்லை என்று சொல்லலாம். சுமார் பத்து ஆண்டு களாக மூடப்பட்டிருந்த இடைக்கதவு திறந்துவிடப்பட்டது. அதில் எனக்குத்தான் அதிக மகிழ்ச்சி. இரண்டு வீட்டுக்கு இடையிலும் ஒடி ஆடிப் பழகினேன். இரு வீடுகளிலும் தனித் தனிச் சமையல்தான். என்றாலும் எனக்கு இரண்டு இடத்திலும் பங்கு கிடைக்கும். ஏன்? பிறகு எல்லாவற்றை யும் என் பெரிய அன்னையார் எனக்காகவே அளித்துச் சென்றபோது, 'இப்படி ஒன்றாகச் சேரவேண்டிய பொருளுக்கு இடையில் வீண் நிலப் போட்டியைக் கிளப்பி யாரோ எழுநூற்று ஐம்பது ரூபாயைச் சாப்பிட்டாரே என எண்ணியது நெஞ்சம். 12. ஒரு ரூபாய் கோட்டு இன்று ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நோட்டுக்கள் நிறையப் புழக்கத்தில் இருக்கின்றன. ஒரு காலத்தில் - போருக்கு முன் - ஐந்து ரூபாய்க்குக் குறைந்த நோட்டுக்களே கிடையாது. ஐந்து, பத்து, ஐம்பது, நூறு, ஆயிரம் என்று இப்டித்தான் நோட்டுக்கள் இருந்தன. ஆயிர ரூபாய் நோட்டையும் இடையில் இல்லையெனச் செய்தார்கள் அரசாங்கத்தார். அப்படியே ஒரு ரூபாய் நோட்டும் ஒரு