பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ஆனந்த முதல் ஆனந்த வரை காலத்தில் இருந்து இடையில் இல்லையென்றாகிப் பிறகுப் போர்க்காலத்தின் இடையில் தோன்றி இன்றளவும் சாகாமல் வாழ்கின்றது. நான் பள்ளியில் படிக்கும் அந்த நாளில் ஒரு ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்தது. அந்த ரூபாய் நோட்டில் ஒன்று கெட்டு விட்டிருப்பதை, அரசாங்கம் திரும்பப் பெறுங் காலத்தில் கணக்கெடுத்திருந்தால் நிச்சயம் கண்டிருக்கும் என நினைக்கிறேன். ஆம். எதிர்பாராதபடி ஒரு ரூபாய் நோட்டு ஒன்றைச் சுக்கல் சுக்கலாகக் கிழித்துப் பறக்க விட்டேன் நான். ஏன் என்று கேட்கிறீர்களா? எனக்குப் பயித்தியமில்லை - பயந்தான். எங்கள் வீட்டுக் கூடத்தில் ஒர் அலமாரி உண்டு. அதில் என் பாட்டி தனது துணிமணிகளையும், சாமான்களையும் வைத்திருப்பார்கள். அம்மாவும் சில சமயங்களில் சில்லறை களை வைப்பது வழக்கம். அதற்கு ஒரு சாவியும் உண்டு. அது பெரும்பாலும் பாட்டியின் இடுப்பில் இருக்கும். சில வேளைகளில் கதவிலும் தொங்கும். என் அப்பா அதை யெல்லாம் தொடமாட்டார். ஒரு நாள் பகல் நான் மட்டும். கூடத்தில் விளையாடிக் கொண்டிருந்தேன். பாட்டி தாழ் வாரத்தில் பூவினைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். அம்மா அடுப்படியில் ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். அன்று விடுமுறையாதலால் நான் வீட்டிலிருக்க ஏதுவாயிற்று. கூடத்து அலமாரியைத் திறந்தேன். பாட்டி பார்த்தார்கள். ஒன்றும் சொல்ல வில்லை. அதில் ஒரு தட்டில் ஒரு மூலையில் சில ஒரு ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. அவற்றுள் ஒன்றை மட்டும் நான் எடுத்து மடித்து என் நூல் ஒன்றில் மறைத்து வைத்துக் கொண்டேன். கதவைப் பழையபடி சாற்றி விட்டேன். அதன் கதவைத் திறக்கும்போது, அதில் ரூபாய் இருக்கிறது என்றோ, அதை எடுத்து மறைக்க வேண்டும் என்றோ நான் நினைக்கவில்லை. அன்றி எடுக்கும் போதும் இதனால் தாயாரிடம் எவ்வளவு கோபத்துக்கு உள்ளாகித் துன்பம் உற நேரும் என்பதையும் எண்ணவில்லை. ஏதோ