பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 ஆனந்த முதல் ஆனந்த வரை அப்பாவுக்கென்று தனி வரவு செலவு கிடையாது. அவர் வீட்டில் இருப்பதே எப்போதோ சிலவேளைகளில்தான். ஆகவே அவசியமான வேளைகளில் கேட்டுப் பணம் வாங்கிக் கொள்வாராம். இல்லாவிட்டால் நண்பர்களிடம் வாங்கிக் கொள்வாராம். அதுவும் இல்லையானால் அம்மா எங்காவது வைத்திருப்பதை எடுத்துக்கொண்டு பிறகு தன் செலவுக்கு எடுத்துக்கொண்டதாக ஒத்துக்கொள்வாராம். அப்படியே அன்றும் அவர்தான் எடுத்துச் சென்றிருப்பார் என அம்மா முடிவுகட்டிவிட்டார்கள். நான் முன்னமே எல்லா நிலபுலன் களும் பிற பொருள்களும் அம்மாவைச் சேர்ந்தன என்பதைக் காட்டி இருக்கிறேன். அப்பா எட்டு மணிக்கு வந்தார். உடனே அம்மா அவருக்குச் சோறுகூடப் போடாது இந்த ரூபாயைப்பற்றிக் கேட்க ஆரம்பித்தார்கள். சாதாரணமாக அவர் எடுத்திருந் தால் ஆமாம். செலவுக்கு எடுத்துக்கொண்டேன்’ என்று சொல்வார்கள். அம்மா சிறிது நேரம் வசைபாடிவிட்டுப் பிறகு அமைந்துவிடுவார்கள். அன்றுதான் உண்மையிலே அவர் தொடவில்லையே! ஆகவே எவ்வளவோ மன்றாடிச் சொன்னார்கள். தாம் ஒன்றையுமே பார்க்கவில்லை எனவும், பார்த்திருந்தால் பத்து ரூபாயுமே தாம். எடுத்துக்கொண் டிருக்க முடியும் எனவும் பலமுறை விளக்கிச் சொன்னார்கள். அம்மா அவற்றைக் கேட்டதாகவே தெரியவில்லை. மேலும் மேலும் வசைமொழிகளை வீசிக்கொண்டே இருந்தார்கள். அப்பாவாலும் ப்ொறுக்கமுடியவில்லை. என்ன செய்வது? அந்நேரவேளையில் நான் உண்மையைச் சொல்லிவிடலாமா என நினைத்தேன். எனது படுக்கையில் கண்ணை மூடிக் கொண்டே படுத்திருந்தேன். இரண்டொருமுறையில் அப்பாவின் பரிதாப நிலையைக் கண்டு, உண்மையைச் சொல்லிவிட்டு, அந்த ரூபாயையும் எடுத்துக் கொடுத்து விடலாம் என நினைத்து எழுந்து உட்கார்ந்தேன். ஆயினும்