பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் கினைவுகள் - 89 அத்திருக்கோயிலுக்கு அம்பலவாணர் கோயில் என்று பெயர். சாதாரணச் சிறு விழாக்களும் ஆண்டு முழுதும் பல பெருவிழாக்களும் அக் கோயிலில் முறையாக நடைபெறும். விழாக்களுக்கு ஊரில் உள்ளவர்கள் கூட்டமாகச் செல்வார் கள். எனினும் அறக்காப்பாளர் தேர்விற்கு எதிர்க்கட்சியாக நின்று தோற்றவரும் அவர் துணையாக இருப்பவர்களும் கோயிலுக்கு வரமாட்டார்கள். நாட்கள் செல்லச் செல்ல ஏதாவது சமாதானம் செய்துகொண்டு பிறகுதான் கோயிலுக்கு வருவார்கள். ஒரு தேர்தலில் எதிருக்கு எதிராக நின்று, பெரும் சண்டைகளுக்கிடையே அத் தேர்தலை நடத்தி அதில் தோல்வியுற்ற ஒருவர், அடுத்த மூன்றாண்டு களில் வெற்றிபெற்ற பெரிய கட்சியோடு நட்பாளராகி அவர்கள் சார்பில் அடுத்த தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். இன்று அரசியல் சதுரங்கத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன. சென்ற தேர்தலில் காங்கிரசை எதிர்த்தவர் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் அபேட்சகராகவும், நேற்றுவரை காங்கிரஸ் அபேட்சகராக வெற்றிபெற்றுச் சட்டசபையில் இருந்தவர் இன்று எதிர்க்கட்சி அபேட்சகராகவும் நிற்பதைக் காண் கின்றேன். என்றாலும் அந்தக் காலத்தில் எனக்கு அந்தக் கட்சி மாற்றமும் அதன் மூலம் அறக்காப்பாளர் பதவி பெற்றதும் வெறும் வேடிக்கைகளாகவே இருந்தன. அப்படிப் போட்டிகள் நடைபெற்றுப் புதுப்புது அறக் காப்பாளர் வரும்போது, புதிதாக வந்தவர் முன் இருந்தவர் செய்ததைக்காட்டிலும் விழா வேடிக்கைகளை அதிகமாகச் செய்து பெயரெடுக்க வேண்டும் என்று முன்னிற்பார்கள்: அப்படியே ஒர் ஆண்டு எங்கள் ஊர் அம்பலவர் கோயிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் பெருவிழா நடைபெற்றது. அவ்விழாவில் சில நாட்கள் மிக முக்கியமானவை. அந்த நாட்களில் ஊரில் உள்ளவருள் பலரும் கோயிலுக்குச் சென்று வருவார்கள்.