பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 91 அவர்கள் செலவு செய்வதிலும் சற்றுத் தாராள மனம் உடை யவர்கள். ஆகவே உயர்ந்த பட்டுப் புடைவைதாம் அவர்கள் கட்டுவன. எனக்கும் அது போன்று உயர்ந்த ஆடைகளும், வேட்டி முதலியனவும் வாங்கிவர ஏற்பாடு செய்வார்கள். காஞ்சிபுரம் முதலிய ஊர்களுக்கு விழாக்களுக்குச் செல்லும் போது தாமே பல கடைகளுக்குச் சென்று வேண்டிய பட்டு முதலியவற்றை வாங்குவார்கள். - அன்று அதிகார நந்தி விழா; அதாவது பெருவிழாவில் ஐந்தாம் நாள் காலை விழா. ஆண்டவனுக்கு அலங்காரம் செய்து தீப ஆராதனை தொடங்குகின்ற நேரம். ஊர் மக்கள் பலரும் கூடியிருந்தனர். சிலர் ஆண்டவனை அன்போடு வணங்கிக் கொண்டிருந்தனர். சிலர் தத்தம் ஆடை அணிகள் பற்றியும், ஊர் வழக்குகள் பற்றியும் அடுத்து வரும் தேர்தல் விளைவுகள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர். அக்க்ாலத்தில் கோயிலில் பணியாற்றிய குருக்களுக்கும் ஊரில் ஒரு சாராருக் கும்கூடச் சண்டை. அவர் மண்டபத்தை விட்டுக் கீழே இறங்கித்திருநீறு தர்மாட்டேன் என்பார். இவர்கள் இறங்கத் தான் வேண்டும் என்பார்கள். ஆண்டவன் அருட்பிரசாத மாகிய திருநீற்றைப் பெறுவதில் அச்சிறு கிராமத்தில் இத்துணை வேறுபாடு இருந்தது என்றால் அது பற்றி நினைக் காதிருக்கமுடியுமோ? இது பற்றியும் இன்னும் சில பொருள் பற்றியும் வ்ந்தவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். எனினும் தீப ஆராதனை சமயத்தில் அமைதி குடி கொண்டது. என் அன்னையார் என்னை அன்று நன்கு அலங்கரித்து அழைத்துச் சென்றிருந்தனர். சென்னையில் இருந்த ஓர் உறவினர் மூலம் வாங்கி வைத்திருந்த நல்ல பட்டு ஒன்றை நான் இடையில் அணிந்திருந்தேன். அந்த வேட்டி காண்பார் அனைவர் கண்ணையும் உறுத்திற்று என்னலாம். நான் என்னை மறந்து ஆண்டவனை நோக்கி அழுது கொண் டிருந்தேன். என் வாழ்வு காண்பவர் கண்களுக்கு அன்றைய