பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 93 முடிந்தது. திரும்பினேன். நண்பர் 'மாமா, எனக்கு இது போல வேட்டி வாங்கிக் கொடுங்கள்’ என்று கேட்டார். மாமாவும் - ஆண்டவனைத் தொழுது கொண்டிருந்தவர்அவர் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ஆகவே நண்பர் சற்று ஆத்திரமடைந்து அதிகமாகக் கச்சலிட்டுத் தனக்கு அது போன்ற வேட்டி வேண்டும் என்பதை வலியுறுத்தினார். பாவம் பத்துப் பன்னிரண்டு வயதான அந்த நிலையில் அவர் அக்கோயிலை மறந்து அழகிய வேட்டியில் ஆசை கொண்டது தவறு அல்லவே, என்றாலும் வழிபாட்டுக்கு இடையில் அவர் செய்த தொந்தரவு தாளாமல் அவர் மாமா அவர் முதுகில் இரண்டு அறை அறைந்தார். நண்பர் மேலும் ஓவென்று கூச்சலிட்டு அழுதார். அது அனைவர் கவனத்தையும் கவர்ந்தது. ஐயர் திருநீறு அளித் தார். அனைவரும் பெற்றனர். நண்பர் மட்டும் விசித்து விசித்து அழுது கொண்டே அதுபோல வேட்டி வேண்டும்’ என்று முணகிக் கொண்டே இருந்தார். அவர் மாமா அவரைத் தனியாக அழைத்து ஏதேதோ சொன்னார். அவர் கள்தாம் பணக்காரர்கள்; அதுபோன்ற உயர்ந்த துணி எல்லாம் வாங்க முடியும். நாம் அதற்கு எங்கே போவது? மேலும் அது எங்கேயோ பட்டினத்தில் இருந்து வாங்கிவந்தது. இந்த ஊரில் எங்கும் கிடைக்காது’ என்று சமாதானப் படுத்தினார் என்று பக்கத்தில் உள்ளவர்கள் பேசிக் கொண் டார்கள். ஆகா! அந்தப் பிஞ்சு உள்ளங்களில்தாம் ஏழை பணக்காரர் என்ற வேறுபாட்டை எப்படித்தான் துரவுகிறார் கள் என நினைத்தேன். நாங்கள் எங்கள் ஊரில் அப்படி ஒன்றும் பெரும் செல்வர்கள் அல்லர். என் அன்னையார் சற்றுத் தாராளமாகச் செலவு செய்து சிறக்க வாழ வேண்டும் என நினைக்கிறவர்கள்; அவ்வளவுதான். அது மற்றவர் களுக்கு வேறுவிதமாகப்பட்டது. ஊரில் உள்ளவர்கள் வாழவும் பொறுக்கமாட்டார்கள். கெட்டாலும் தாங்கமாட் டார்கள்’ என்று பலரும் பேசிக் கொள்ளுகின்ற ஒரு பேச்சு பற்றி அன்றே அம்மா அடிக்கடி சொல்லுவார்கள்,