பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

தம்பி, நேற்றுப் பிரசங்கம் செய்தீர்களாமே, எனக்குத் தெரியாமல் போயிற்றே என்று கூறினார்கள். அதற்கு நான் :-- ஆமாம் நண்பர்கள் ஏற்பாடு செய்தார்கள். பேசினேன். ஆனால் அந்த விஷயம் தங்களுக்குத் தேவையில்லையே.

வ. உ, சி :-- ஆமாம் தம்பி! எனக்கு வயதாயிற்று, தேவையில்லை தான், ஆனால் என் மகளுக்குத் தேவையாயிற்றே.

நான் :- ஏன் அவளுக்கு எத்தனை குழந்தைகள், அதிகமோ ?

வ. உ. சி :- இதுவரை மூன்றுதான், ஆனால் இனி எத்தனையோ, யார் அறிவார்? ஆனால் நான் அறிய விரும்பியது வேறு விஷயம்.

நான் :- என்ன விஷயம், எனக்கு விளங்கவில்லையே.

வ. உ. சி :- தம்பி! ஐப்பசி கார்த்திகை மாதங்களில் அடைமழை பெய்கிறதல்லவா ? அந்தக் காலத்தில் குழந்தை பெறாமல் பங்குனி சித்திரையில் பெறுவது தான் நல்லது, அதற்கு வழி உண்டு என்று நேற்று கூறினீர்களாமே, அந்த வழிதான் எனக்குத் தெரிய வேண்டும்.

நான் : ஏன் அதைக் கேட்கிறீர்கள், நீங்கள் தான் இனிக் குழந்தை பெறப் போவதில்லையே.

வ. உ. சி : இல்லை தம்பி, என் மகள் எப்போதும் பிரசவத்துக்கு இங்கு வருகிறாள், அவள் எப்போதும் வருவது மழை கொட்டும் காலத்திலேயே. அதனால் நான் படும்பாடு அதிகம். டாக்டரைக் கூப்பிட முடியாது, மருத்துவச்சியையும் கூப்பிட முடியாது. அதோடு