பக்கம்:ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பதிப்புரை


நம் தேச முன்னேற்றத்திற்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது உணவு உற்பத்தியைப் பெருக்குவதும் அதற்குத் தக்கபடி மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதுமாகும், இதனை உணர்ந்தே நமது நேரு அவர்கள் குடும்பக்கட்டுப்பாட்டின் நன்மையை ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டும் என்று விரும்பினார்கள். அரசாங்க ரீதியில் நாடு முழுவதும் கையாள வகை செய்தார்கள்.

ஆசிரியர் திரு.திருகூடசுந்தரம் குடும்பக் கட்டுப்பாட்டின் முக்கியத்தை உணர்ந்து 1921-ம் ஆண்டு விவாகமானவர்களுக்கு ஒரு யோசனை என்ற நூலை எழுதி வெளியிட்டு அறிஞர்களின் பாராட்டுதலையும் வாசகர்களின் நம்பிக்கையையும் பெற்றார்கள்.

தற்போது குடும்பக் கட்டுப்பாட்டுக்காக கையாளப்படும் எல்லா முறைகளையும் ஆசிரியர் விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து அவற்றுள் சாலச் சிறந்தது ஆப்பரேஷன் முறையே என்பதைப் படங்கள் மூலமும் சந்தேகக் கேள்விகளுக்கு தக்கவிளக்கங்களுடனும் மிகத் தெளிவாக எழுதியுள்ளார்கள்.

எமது பதிப்பகக் குறிக்கோளின்படி குடும்பக் கட்டுப்பாட்டுப் பணியில் பங்கு கொள்ள இந்த நூலை வெளியிடும் வாய்ப்பை எமக்கு அளித்ததற்கு ஆசிரியர் அவர்களுக்கும் இன் நூல் தேசமுன்னேற்றத்திற்கு உகந்தது எனக் கருதி முன்னுரை தந்து எம்மை ஊக்குவிக்கும் முதலமைச்சர் கனம் எம். பக்தவத்சலம் அவர்கட்கும் மக்கள் நலனே தன் லட்சியம் எனக்கொண்டு மக்கள் நல் வாழ்வுக்குரிய இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் உயர்திரு கு. காமராஜ் அவர்களுக்கும் எமது நன்றி உரியதாகுக.

வாசகர்கள் இந்த நூலால் அடையும் பயன் ஒன்றே அவர்கள் கூறும் நல்லாசி.

பாபுஜி பதிப்பகம்

உ. தங்கப்பா
பதிப்பக உரிமையாளர்,