பக்கம்:ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆபுத்திரன்

7

துக்கொண்டு, இரவில் அவ்வம்பலத்திலேயே நித்திரை செய்து காலங்கழித்து வந்தான்.

அங்ஙனம் அவன் காலங்கழித்து வருநாளிலே ஒரு நாள் மழை பெய்துகொண்டிருக்கும் நள்ளிரவில் சிலர் வந்து, ஆபுத்திரனிடம் “எங்களைப் பசி வருத்துகின்றது" என்று வருந்திக்கூறினர்கள். யாசக உணவல்லாமல் வேறு உணவு இல்லோனாகிய ஆபுத்திரன், அவரது பசியாற்றும் ஆற்றல் இல்லாதவனாய் மிகவருத்தமுற்றான். அச்சமயத்தில் கலை நியமத்தில் கோயில்கொண்டிருக்கும் சிந்தாதேவி, எழுங்தருளி வந்து ”எட! வருந்தாதே; இதனைக் கொள்வாயாக; காடெல்லாம் மழைவளங்குன்றிப் பஞ்சம் உற்றாலும் இந்த ஓடுவறுமையை அடையாது; கொடுக்கக் கொடுக்க உணவு வளர்ந்துகொண்டே வரும்" என்று சொல்லித் தன்கையிலுள்ள அக்ஷயபாத்திரம் என்னும் ஓர் பாத்திரத்தை அவன் கையிற் கொடுத்தாள். உடனே அவன் அதைப்பணிவுடன் வாங்கி எல்லையில்லா மகிழ்ச்சியடைந்து,

           “சிந்தா தேவி செழுங்கல நியமத்து
           நந்தா விளக்கே! நாமிசைப் பாவாய்!
           வானேர் தலைவி! மண்ணுேர் முதல்வி
           ஏனேர் உற்ற இடர் களைவாய்!”

என்று துதித்து, அத்தேவியைத் தொழுது, பசியால் வருந்தித் தன்னிடம் வந்த அவர்களே உண்பித்து, அந்நாள் தொட்டு, முட்டின்றி எல்லா உயிர்க்கும் உணவளிப்பானாயினான். உண்பதற்காக மனிதர்கள் பலர் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். பறவைகளும், விலங்குகளும் அவனே விட்டகலாது அன்புடன் சுற்றிக்கொண்டன. இவன் உணவூட்டும் ஒசை இடையின்றி ஒலித்துக்கொண்டேயிருந்தது;