பக்கம்:ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆபுத்திரன்

17

துதித்து நின்றாள். இங்ஙனம் நின்ற மணிமேகலைக்குத் தீவதிலகை, உயிர்களுடைய பசித்துன்பத்தையும், அதனை நீக்குவோருடைய பெருமையையும் சொல்லப் புகுந்து, "பசியென்னும் பாவி, மக்களுடைய குடிப்பிறப்பின் பெருமையை அழிக்கும்; பலவிதச் சிறப்புக்களையும் நீக்கும்; ஆதாரமாகக் கொண்ட கல்வியாகிய தெப்பத்தையும் கை விடச்செய்யும்; நாணத்தைக் களையும்; அழகைக் கெடுக்கும்; மனைவி மக்களோடு அந்நியன் வீட்டுவாசலில் கொண்டு போய்நிறுத்தும். இப்படிப்பட்ட கொடிய பசியைத் தீர்ப் போரது புகழை அளவிட்டுச் சொல்ல முடியாது. செல்வ முடையோர்க்கு ஒருவர் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவது, அவர்களிடமிருந்து மற்றொரு உதவியை எதிர்பார்ப்பதாக முடியுமாதலின், அது தருமத்தை விலைக்கு விற்பதாகும். ஏழைகளுடைய பசியை நீக்கிக் காக்கின்றவர்களே நல்ல வாழ்க்கை யுடையவர்களாவார்; பசித்தவர்களுக்கு உணவளிப்பவர்களை, அவர்களுக்கு உயிரைக் கொடுப்பவர்களென்றே சொல்லலாம்; ஆதலால், பசியைத் தீர்த்து, உயிரைக் கொடுப்பதாகிய அறத்தைச் செய்வாய்” என்று கூறினாள்.

இதனைக் கேட்ட மணிமேகலை, "குழந்தையின் முகத்தைக்கண்டு பால்சுரந்தளிக்கும் தாய்போல், ஏழைகளது முகத்தைக்கண்டு இரங்கி இப்பாத்திரம், மேன்மேலும் அவர்களுக்கு அமுதசுரங்களிக்கும் அற்புதத்தைக் கானும் விருப்புடையேன்” என்றுகூறித் தீவதிலகை யோடு சிறிது நேரம் அளவளாவியிருக்து, அவளைப் பணிந்து விடைபெற்று, புத்த பீடிகையைத் துதித்து ஆகாயகமன மந்திரத்தை ஜெபித்து, மேலெழுந்து ஆகாய வழியாகப் போய்ப் புகார் நகரத்தை அடைந்து தன் வரு-

2