|16.
'தசாவதாரம்" என்று காண்ட்ராக்டர் கண்ணப்பதாஸ் கூறிஞர்.
'ஏகப்பட்ட பணம் செலவாகுமே!’ என்ருர் சிங்காரப் பொட்டு.
'செலவழிச்சு நடத்தினுேம்ன கூட்டம் மொய்ச்சுத் தள் ளும்' என்ருர் வக்கீல்.
'டாக்டர் என்ன நினைக்கிருரோ?' என்று சிங்காரப் பொட்டு மெதுவாக நிரவல் செய்தார்.
டாக்டர் கண்ணைக் கொஞ்சம் மூடித் திறந்தார். அதேநேரம் சகுந்தலா என்ன நினைக்கிருள் என்பதை அவள் முகக் குறிப்பி லிருந்து அறியப் பார்த்தான் சாமண்ணு.
அவள் பார்வை அடிக்கடி சாமண்ணு பக்கம் திரும்பி அங் கேயே லயித்து நின்றது. அது காதலா, கனிவா, அககறையா என்பதைச் சாமண்ணுவால் புரிந்து கொள்ள முடியவில்லை.
முதல்முதல்சாமண்ணுஅவளைப்பார்த்ததிலிருந்தேஉள்கதவு திறந்தது. போல இருந்தது அவனுக்கு மென்மையாக ஒரு வாசனைப் புகை போன்ற உணர்வு அவன் உடலெங்கும் நீந்திச் சென்றது. மனசில் ஒரு சின்ன அழுகை கூட வந்தது.
'இந்த உணர்ச்சிக்கெல்லாம் என்ன காரணம்? அதை நினைக்கலாமா? அந்த ஒரு நினைப்பே பரவசத்தைத் தந்தது.
'அவன் தன்னை ஒரு நடிகன் என்ற முறையில் பார்க்கிருளா? அல்லது தானே கிழித்துக் கொண்ட எல்லைக் கோட்டுக்கு அப்பாலிருந்து பழகுகிருளா?அவளை அடையக்கூடிய அந்தஸ்து தனக்கு இருக்கிறதா? ஒருவேளை எட்டாத பழத்துக்கு ஏக்கப்
. 113