இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சின்னச் சாலையிலிருந்து வண்டி பெரிய சாலைக்குத்
திரும்பியது. வானம் கரியதாகி நாலு திசையும் விரிந்திருந்தது. மழை மேகங்கள் அடுக்கடுக்காகப் புரண்டன. பிரம்மாண்ட இருட்டு ஒன்று அவன் வண்டியை நோக்கி வந்து கொண்டிருந் தது. பூமி அத்தனையும் குளிர்ந்துவிட்டது.
திடீரென்று பாப்பா உருவம் தோன்றியது. அமைதியாக அலையும் ஆழ்ந்த கருவிழிகள். சாந்தம் நிறைந்த புன்னகை முகம்! இளம் சிவப்பில் உதடுகள். ரேகை இழைகள் போல் காது வழியே வழியும் கூந்தல்!
"பாப்பா!'
தொண்டை கிழியக் கத்தினன்.
காற்று அதை அள்ளிச் சென்றது. வண்டிக்காரன் திரும்பிப் பார்த்தான்.
30