பக்கம்:ஆப்பிள் பசி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“நீ அழாதே பாப்பா! நீ ஏன் அழறே?”

“நீங்க எனக்குத் தாலி கட்ட முடியாது. எனக்கு அப்பவே கலியாணம் ஆயிட்டுது. இத பாருங்க தாலி!” என்று தன் கழுத்தில் மறைந்திருந்த தாலியைத் தொட்டுக் காட்டினாள் பாப்பா.

“என்னது! உனக்குக் கலியாணம் ஆயிட்டுதா!”

“ஆமாம்.”

“அப்படின்னா உன் புருஷன்...?”

“நான் தாசி மகளாம்! அவன் என்னைத் தள்ளி வச்சுட்டான். இப்ப நான் வாழாவெட்டி” என்றாள் பாப்பா.

32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/35&oldid=1029346" இலிருந்து மீள்விக்கப்பட்டது