பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 7

சான்றாகின்றது. முருகனது முதல் மனைவி தெய்வானை என்று தெய்வச் சொல் கொண்டு அமைந்ததும் நினைக்கத்தக்கது.

தமிழர்தம் வாழ்வின் இரு கண்கள் காதலும் வீரமும், அஃதாவன அகமும் புறமும், இவ்விரண்டிற்கும் முருகன் சான்று என்பதை இலக்கியங்கள் சுட்டிச் சுட்டிப் பேசுகின்றன. சுருக் கங் கருதி ஒரு சில காட்டலாம் :

மகளிரது எழிற்கோலக் கண்களுக்கு உவமமாக:

'அறுமுக ஒருவன் ... ... ... ... ...

அஞ்சுடர் நெடுவேல் ஒன்று நின் முகத்துச் செங்கடை மழைக்கண் இரண்டாயீத்தது’’’

'முருகன் வைவேல் இரண்டனைய கண்ணாள்’’’

ஆடவரது காதற் சிறப்பை உணர்த்த உவமமாக:

'கண்டேத்தும் செவ்வேள் என்று இசைபோக்கிக்

காதலால்

2 ඩී.

கொண்டேத்தும் கிழமையான் கோவலன் என்டான்'

"குருகுபெயர்க் குன்றம் கொன்றோன் அன்ன நின் முருகச் செவ்வி'

D 6) Tلا f T تا ۰ . م . . . . . - ۶ و அமரர் மேவரந் தோன்றிய அண்ணல்போல் குமரன் ஆக்கிய காதலின்' "

20. சிலம்பு : மனையறம் : 49 - 51

21. சிவசிந் ; 1291 - 94

22. சிலம்பு : மங்கல : 36 - 39

23. மணி : பனிக்கறை 49, 50.

24. சிவசிந் , 994 2 - 4