பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 வளையல்

குறிக்கின்றார். இதுகொண்டு, தம் கருத்தை நிலைநாட்ட விரும்புவோர் எவரும் அதற்குரிய இடமாகப் புலவர்கள் விற்றிருக்கும் இப்பட்டி மண்டபத்தையே கொண்டனர் என அறிகின்றோம். பொதுவில் வெளியே எங்கேனும் அறை கூவுவோர்க்கும் இவ்விடமே சொற்போரிட்டு முடிவு காணும் களமாக அமைந்தது. .

எனவே,

பட்டி மண்டபம் என்பது புலமை ஆய்வுக்கும், புலமை வழக்குக்கும் உரிய இடமாகும். இங்குப் பெருகிய நிகழ்ச்சியாக நாள்தோறும் புலமை ஆய்வு நிகழும். அருகிய நிகழ்ச்சியாக வாய்ப்பு நேரும் போது புலமை வழக்காடுதலாம் சொற்போர் நிகழும். எனவே, புலமை ஆய்வுக்காக எழுந்த பட்டி மண்டபம் புலமை வழக்காடுதலுக்கும் இடமாகி அந்நிகழ்ச்சிக்கும் பெயராயிற்று.

புலமைக் கருத்தை வைத்து வழக்காடுவது போன்றதே மன்னன் முன்னர்க் குற்றம் வைத்து வழக்காடுவதும் ஆகும் எனவே, அவ்வாறான மண்டபமாம் திருவோலக்க மண்டபமும் வழக்கை உசாவி அறியுங்கால் பட்டி மண்டபமாக்க் குறிக்கப் பெற்றது.

- முன்னே விரிவாகக் கண்டபடி,

அரங்கம் என்பது மேடை, மன்றம் என்பது அவை கூடும் இடம். மண்டபம் என்பது கட்டடம்.

இவற்றின்படி,

சொற்போர் புரிவோர் இருந்து சொற்போர் புரியும் களமாகிய அரங்கம் பட்டி அரங்கம்' - எனப் பெயர்பெற்றது.

அந்த அரங்கத்துடன் நடுவரும் சான்றோரும் ஒன்று கூடும் கூடமாகிய அவை பட்டிமன்றம் எனப் பெயர் பெற்றது.

பட்டி அரங்கையும் பட்டி மன்றத்தையும் கொண்ட கட்டடமாம் மண்டபம்

பட்டி மண்டபம் - எனப் பெயர் பெற்றது.