இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பனிரண்டாம் நூற்ருண்டுக் கல்வெட்டு ஒன்று (284/ 1961- 62 AR of 1. E.) ஆம் பரநாதப் பெருமாளே என விளிக்கிறது. ஆம்பர நாதப் பெருமாள் என்பது ஆமூர்நாதப் பெருமாள் என்பதன் திரிபாக இருக்கலாம். எனவே கொடுமுடியின் தொடர்பாக ஆண்டவன் திருநாமம் அமைந்துள்ளதை உணரலாம். காலப் போக்கில் ஆண்டவன் பெயர் மகுடேசுவரன், மகுடபதி என மாறிவிட்டது. ஆண்டவன் பெயரான கொடுமுடி ஊருக்கு நிலைத்து விட்டது. அதல்ை அதன் பழைய பெயரான கறையூர் வழக்கொழிந்து விட்டது. 충37