பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7


படித்தவர் யார்?

மயூரசர்மன் என்னும் வீர மறையவனும், அவன் ஆசிரியராகிய வீரசர்மனும் கற்றற் பொருட்டுக் காஞ்சிக் கடிகைக்கு வந்தனர். காசாகுடிப் பட்டயம், “ஸ்வகடிகாபூதேவதாம்” அதாவது பிராமணர்களை யுடையது கடிகை என்று கூறுகிறது. வேலூர்ப்பாளையப் பட்டயம் “கடிகாம்த்விஜநாம்” அதாவது இருபிறப்பாளர் கடிகை என்று கூறுகிறது. எனவே காஞ்சிக் கடிகையில் படித்தவர் பிராமணர்களே யாதல் கூடும். -

கடிகையின் அளவு

இக் கடிகையில் கற்றவர் எத்தனைப் பேர் என்று அறிவதற்குத் தக்க சான்றுகள் இல்லை. எனினும் காஞ்சிக் கடிகையில் பன்னுாறு மாணவர்கள் உயர்கல்வி கற்றிருத்தல் வேண்டும் என்றும், பல பேராசிரியர்கள் இருந்திருத்தல் வேண்டும் என்றும் கொள்ளுதலில் தவறில்லை. பல்லவ மன்னனுகிய இரண்டாம் நந்திவர்மனுடைய 62-ஆம் ஆண்டுக்குரிய திருவல்லம் சாஸனம் ஒன்றில் (S. 1. 1. Vol. 111, Part , P. 91). “இது அழித்தான் கடிகை ஏழா இருவரையும் கொன்ற பாவத்தில் படுவான்” என்று காணப்படுகிறது, ‘ஏழாஇருவர், என்றது ‘ஏழாயிரவர்’ என்பதாகும். இது இக்கல்வெட்டின் காப்புரைகளுள் ஒன்று. இதனால் கடிகையாரைக் கொல்வது ‘பார்ப்பார்த் தப்பிய கொடுமை’யினும் பாவமிக்கது என்ற கருத்து அறியவரும். இங்குக் கண்ட கடிகை ஏழாயிரவர் என்றது காஞ்சிக் கடிகையாரையே குறித்ததாதல் வேண்டும்’ இவ் வல்லம், காஞ்சிக்கு அண்மையில் இருப்பது. இந்நந்திவர்மனை அரசனுக்குவதில் பெரும்பங்கு கொண்டவர் காஞ்சிக் கடிகையார். இரண்டாம் விக்கிரமாதித்தனது கைலாசநாதர் கோயிலிலுள்ள கன்னடக் கல்வெட்டும் இங்ங்னமே காப்புரை கூறுகிறது, எனவே திருவல்லம் கல்லெழுத்துக் காப்புரையில் கண்ட கடிகை ஏழாயிரவர் காஞ்சிக் கடிகையாரே