பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
52



உடையார் ரீராசராசதேவர் நம்பிராட்டியார் தந்தி சக்தி விடங்கியாரான நீஒலோக மாதேவியார் வடகரை இராசேந்திர சிங்க 3 வளநாட்டுப் பொய்கை நாட்டுத்4 திருவை யாற்றுப்பால் நாம் எடுப்பித்த திருக்கற்றளி ஒலோகமாதே வேஸ்வரம்.’’

இத்திருக்கோயில் இந்நாளில் 'உத்தரகைலாயம்' என வழங்குகிறது . --

இத்திருக்கோயில் வழிபாட்டிற்கு நிபந்தங்களும். இங்கு எழுந்தருளுவித்த திருமேனிகளும், தரப் பெற்ற திருவாபர ணங்களும், திருப்பரிகலங்களும் இத்திருக்கோவிலிலுள்ள கல் லெழுத்துக்களினின்றறியப் பெறுகின்றன.

நிலம் அளித்தமை"

ஐயாறப்பர் திருக்கோயில் தேவர்கன்மிகள் ஒலோகமா தேவீச்சரத்து மஹாதேவர் கன்மிகளுக்கு 3 வேலி நிலத்தை வேலி ஒன்று 100 கழஞ்சு பொன் வீதம் 307 கழஞ்சு ஒன்பது மஞ்சாடிக்கு விற்றனர். “இந்நிலத்தில் அகப்பட்ட மேனேக் கிய மரமும் கீணுேக்கிய கிணறும் உடும்போடி ஆ ைம தவழ்ந்த தெப்பேர்ப்பட்டதும் காராண்மை மீயாட்சியும் புகு வழிபுகவும் பொதுவழி போதவும் பாயும் வழி பாயவும் வரும் வழி வரவும் இந் நிலத்தால் வந்த மன்றும் கன்றுமேய்பாழும் பெறுவதாகவும். குலையும் குரம்பையும் செய்யாததாகவும். +செந்நீர்க்ககவனே செய்யாததாகவும். இந்நிலத்தால் வந்தது

3. இராசேந்திர சிங்கன் என்பது இராசராசனின் பட்ட

ப்பெயர்களில் ஒன்று. 4. பொய்கைநாடு: இது திருவையாற்றைச் சுற்றியுள்ள

நிலப்பரப்பு. 5. பண்டாரத்தார். பிற்காலச் சோழர் வரலாறு

பாகம் 1 பக்கம் 127. 6. S. T. I.Vol V No. 518 செல் நீர்க்கு அக அணை

சென்னிர்க்ககவண. போகும் நீர்க்கு உள்மடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/59&oldid=980727" இலிருந்து மீள்விக்கப்பட்டது