பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் ( 109

'இழைகளும் குழைகளும் இன்ன முன்னமே

மழை பொரு கண்ணிணை மடங்தை மாரொடும் பழகிய எனினும் இப்பாவை தோன்றலால் அழகு எனும் அணியும் ஓர் அழகு பெற்றதே (34)

ஈகலான் புகழ்

கம்பர், வாய்ப்பு நேரும்போதெல்லாம், மக்களுக்கு அறிவுறுத்தித் திருத்தும் கருத்துகளை மெல்லப் புகுத்துவதில் வல்லவர். சூர்ப்பனகை வர வரத் தனது கற்பு நிலையி னின்றும் தாழ்ந்து கொண்டிருந்தாளாம். இந்த நிலைக்கு உவமையாகக் கருமியின் புகழைக் குறிப்பிட்டுள்ளார்.

"ஏத்தவும் பரிவின் ஒன்று ஈகலான் பொருள்

காத்தவன் புகழ்எனத் தேயும் கற்பினாள்' (26)

எவ்வளவோ புகழ்ந்து கேட்பினும் அன்போடு ஒன்றும் உதவாமல் பொருளைக் காந்துக் கொண்டிருப்பவனது புகழ்போல் அவளது கற்பு தேய்ந்ததாம்.

பொருள் காத்தவன் புகழ் என்பது இகழ்தான். தொடக்கத்தில் அவனிடம் பொருள் சேரத் தொடங்கிய போது இவன் பயன்படுவான் என எண்ணி மக்கள் புகழத் தொடங்கியிருக்கக் கூடும். செல்வம் இருப்பதனால், எல்லாரும் வருக வருக என வரவேற்றிருக்கக் கூடும். பின்னர் அவன் சயாமுட்டிக் கருமி எனத் தெரியத் தொடங்கியதும், அவனது செல்வப் புகழ் சிறிது சிறிதாகத் தேய்ந்து இகழ் என்னும் பெயருக்கு உரியதாகி விடும்.

"உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று

ஈவார்மேல் நிற்கும் புகழ்' (232)

என்றார் வள்ளுவர். ஈவார்மேல் புகழ் நிற்கும் என்றால், ஈயாதார் மேல் இகழ் நிற்கும் என்பது தானே போதரும்.