பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 ப் ஆரணிய காண்ட ஆய்வு

'மரு ஒன்று கூந்தலாளை வனத்து

இவன் கொண்டு வாரான்

உரு இங்கு இது உடைய ராக

மற்றையோர் யாரும் இல்லை

அரவிந்த மலருள் நீங்கி அடியிணை

படியில் தோயத்

திரு இங்கு வருவாள் கொல்லோ

என்று அகம் திகைத்து கின்றாள்' (59)

கூந்தலாள் - சீதை. இவன் - இராமன். அரவிந்தம் = தாமரை. இவள் இராமனின் மனைவி இல்லை என்பதற்கு இரண்டு காரணங்கள் கற்பித்துள்ளாள் அரக்கி.

ஒன்று மனைவியா யிருப்பின், இவ்வளவு அழகிய இளம் பெண்ணைத் தவசியர் இருக்கும் தவ வனத்திற்குள் அழைத்து வர மாட்டான். மற்றொன்று. இவ்வளவு அழகுடைய இளம் பெண்கள் இன்னும் இங்கே பலர் இருப்பின், துணையிருக்கிற தென்று இவன் அழைத்து வந்திருக்கலாம் - அப்படி வேறு யாரும் இங்கில்லை.

எனவே, இவள் இவனுடைய மனைவி இல்லை; என்னைப்போல் இடையில் வந்து சேர்ந்து கொண்ட எவளோ ஒருத்தியாகத்தான் இருக்கவேண்டும் என எண்ணு கிறாள்.

"என்னைப் போல் இடையே வந்தாள்

இகழ்விப் பெண்” (62)

என்று பின்பும் சொல்கிறாள்.

"தான் பத்தினியா யிருந்தால் தேவடியாள் தெருவிலும் குடியிருக்கலாம், என்பது ஒரு பழமொழி.

'சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்

கிறை காக்கும் காப்பே தலை' (57)