சுத்தர சண்முகனார் . 121
அன்றிலால் நடுக்கம்
அரக்கி காம நோயின் எல்லைக்குச் சென்று விட்டாள். திங்கள், தென்றல் முதலியவை காமத்தை மிகுவிப்பதால் அவற்றை நொந்து வெறுக்கிறாள்.
சேவல் அன்றிலொடு பெடை அன்றில் நாவினால் ஒலி எழுப்பித் தொடர்பு கொள்வதைக் கேட்டுச் சோர்ந்து போனாள்:
சேவலோடு உறை செந்தலை அன்றிலின்
காவினால் வலி எஞ்ச கடுங்குவாள் (76)
ஆண் அன்றில் சிறிது நேரம் பிரிந்திருந்தாலும், பெண் அதனைக் கூவிக் கூவி அழைத்துக் கொண்டே யிருக்குமாம். பிரிந்திருக்கும் காதலர்கள், என்றும் ஒன்றியிருக்கும் அன்றில் இணையின் இன்ப ஒலி கேட்டுப் பொறாமை கொள்வராம். இந்தச் செய்திகளை,
'நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்
இறவின் அன்ன கொடுவாய்ப் பெடையொடு பிரிந்தோர் கையற நரலும் கள்ளென் யாமம்’ (160) 'அன்றிலும் பையென நரலும் இன்றவர் வருவர் சொல் வாழி தோழி’ (177) என்னும் குறுந்தொகைப் பாடல்களாலும், மணிமேகலையில் உள்ள
'அன்றில் பேடை அரிக்குரல் அழைஇச்
சென்று வீழ் பொழுது சேவற்கு இசைப்ப'
(5 : 127, 128) என்னும் பகுதியாலும், மனோன்மணியத்திலுள்ள
“எங்கிருந்தன. இவ் அன்றில் பேய்கள்
நஞ்சோ காவிடை கெஞ்சம் துளைக்கும்”