பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 ) ஆரணிய காண்ட ஆய்வு

பெயர்த்து வேறோர் இடத்தில் கொண்டுபோய் வைப்பர்.

இதற்குத்தான் நாள்கொள்ளுதல் என்பது பெயர். வாள்

நாட்கோள் குடை நாட்கோள், முரசு நாட்கோள்

என்றெல்லாம் இதனைக் குறிப்பிடுவதுண்டு. தொல்காப்பியம்புறத்திணை இயலில்,

'குடையும் வாளும் நாள்கோள் அன்றி

மடையமை ஏணி மிசை மயக்கமும் ...” (11)

என்றும், சிலப்பதிகாரத்தில்

"வாளும் குடையும் மயிர்க்கண் முரசும்

நாளொடு பெயர்த்து ... (5: 91 92)

என்றும், புறப்பொருள் வெண்பாமாலையில்

"செற்றார்மேல் செலவமர்ந்து

கொற்ற வாள் நாள் கொண்டன்று” (93) 'செற்றடையார் மதில் கருதிக்

கொற்ற வேந்தன் குடைநாள் கொண்டன்று' (39) என்றும் உள்ள பாடல் பகுதிகளால் நாள் கொள்ளல் பற்றி அறியலாம்.

மக்களும் நல்ல நேரத்தில் தொடங்கி வைப்பதும், நல்ல நேரத்தில் பொருள்களை அப்புறம் பெயர்த்தலும் ஆகிய நாள் கொள்ளலை நடத்துகின்றனர்.

சிற்றுார்களில் ஊர்க்கட்டுப்பாடு உண்டு. நெசவு நடக்கும் ஒர் ஊரை எடுத்துக் கொள்வோமே. அங்கே பொங்கல் கழிந்ததும், ஒரு நல்ல நாள் குறிப்பிட்டு, கோயிலில் பூசனை நடத்திப் பின்னரே கட்டுப்பாடாக அனைவரும் பணி தொடங்குவர். இதற்கும் நாள் கொள்ளல் என்பது பெயர்.

இந்த முறையில், இராவணனின் தலைகள் அறுப்பதற்கு, அரக்கியின் உறுப்புகளை அறுத்தது நாள் கொண்டது போன்று இருந்ததாம்.