பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் ளில் மத்திய அரசாங்கத்திற்கும் தனிநாடுகளுக்கும் சம அதி காரம் இருக்கிற தென்றும் கூறினேம். அங்கே குறிப்பிட்ட அதிகாரப் பிரிவினையும் ஸ்தல சுய ஆட்சியின் விசேஷ அம்ச மாகிய அதிகார விநியோகமும் வெவ்வேறு இயல்புடையன வாகும். ஐக்கிய ஆட்சி அரசுகளிலும் சமஷ்டி அரசுகளிலும் சிறு ஸ்தலத் தொகுதிகள் பல ஏற்படுத்தப்படுவதால் அவற். றின் விஸ்தீரணமும் ஜனத்தொகையும் ஆட்சி அமைப்பும் உரிமைகளும் வேலைகளும் பலவிதமாக இருக்கின்றன. இவ் விதமாய் நாடுகளைப் பிரிப்பதனால் இரண்டு நோக்கங்கள் நிறைவேறுகின்றன. முதலாவது, நிர்வாகத்தில் ஏற்படும் செளகரியம். இரண்டாவது, சுய ஆட்சியில் ஜன்ங்களுக் குள்ள ஆசை நிறைவேறுவது. ஸ்தல சுயஆட்சியின் அளவு, தொகுதிகளின்தரம் முதலியவை மத்திய அரசாங்கத்தால் தீர் மானிக்கப்படுபவை. ஆனல் ஸ்தல சுய ஆட்சித் தொகுதிக்கு ஒரு பூரணம்ான ஆட்சித் திட்டமும், தேவைக்குத் தக்கபடி வரிவிதித்துப் பணம் வசூலிக்கும் அதிகாரமும் கொடுக்கப்பட வேண்டும். . . . . ஸ்தல சுய ஆட்சி முறையில் முனிசிபாலிட்டியைப் ஸ்தல போன்ற நகரஸ்தாபனங்களும் பஞ்சாயத்து ஸ்தாபனங்களின் போர்டுகளைப் போன்ற கிராம ஸ்தாபனங் லக#னங்களும் களும் உண்டு. சாதாரணமாக நகர ஸ்தா ' பனங்களில் இடவிஸ்திர்ணம் குறைந்தும், ஜனத்தொகை அதிகமாயும், வியவசாயம் சிறிதாகவும், கைத்தொழில்கள் அதிகமாயும், வியாபாரம் மிகுந்தும் இருக்கும். ஸ்தல ஸ்தாபனங்களே ஏற்படுத்துவதில் ஒவ்: வோர் அரசு ஒவ்வொரு முறையை அனுஷ்டிக்கின்றது. மொத்தத்தில் அமைப்பு முறை எங்கும் ஒரேமாதிரி யாகத்தான் இருக்கிறது. ஸ்தல ஸ்தாபனங்களே அமைக்கும் போதே அவற்றின் ஆட்சிமுறை, அதிகாரங்கள் முதலியவை களே மத்திய அரசாங்கம் நிர்ணயித்துவிடும். அவற்றைச் சட்டசபைமூலம் மாற்றவோ எடுத்துவிடவோ கூடும். புல:நாடுகளில் ஸ்தல ஸ்தாபனங்கள் இரண்டு விதமான பொறுப்புக்களை வகித்து வருகின்றன. ஸ்தலப்பிரஜைகளின் 102.