பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் மான செய்திகளே ஒவ்வொன்றுக்கும் அறிவித்துப் பயன் பெறச் செய்யலாம். முக்கியமாக, பொதுச் சுகாதாரத்திலும் போக்கு வரவுச் சாதனங்களிலும் மற்றப் பொதுகல விஷயங் களிலும் மத்திய அரசாங்கம் பேருதவிசெய்யக்கூடும். மேலும் ஸ்தலஸ்தாபனங்களுக்கு அவற்றின் வருமானம் மட்டும் போதுவதில்லை. சில சமுதாயத் தேவைகளையும் முன்னேற் றத் திட்டங்களையும் நிறைவேற்ற அவை மத்திய அரசாங்கத் தினிடம் பொருளையும் வேறு உதவிகளையும் எதிர்பார்க்க வேண்டி யிருக்கிறது. ஆகையால் மேலதிகாரிகளின் கண் காணிப்பும் பரிசீலனையும் மிகவும் அவசியம். ஜனங்கள் ஒரு பிரதேசத்தில் நெருங்கி வாழ்வதல்ை தெருக்களையும் பாதைகளேயும் செப்பனிடுவது, விளக்குப் போடுவது, ஊரைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, பிற - சுகாதார விஷயங்களேக் கவனிப்பது முத “ . . . லிய பொறுப்புக்கள் ஏற்படுகின்றன. இப் பொறுப்புகளை யெல்லாம் சுயஆட்சி ஸ்தாபனங்களே வகித்து வரவேண்டும். உல்லாசத் தோட்டங்கள், ரேடியோ, வாசக சாலைகள், விளையாட்டு வெளிகள், குடிதண்ணிர் முதலிய பொது வசதிகளே அவைகளே ஏற்படுத்திக் கொடுக்கவேண் டும். மின்சார விநியோகம் போன்ற பொதுநல விஷயங்களே அவைகளே கிர்வகித்து வரவேண்டும், இல்லாவிடில், அவை களிலிருந்து கிடைக்கும் பெரிய லாபம் முழுவதையும் வேறு வித முதலாளிகள் அடைந்துவிடுவார்கள். நம் நாட்டில் பல முனிசிபாலிட்டிகளின் முன் யோசனைக் குறைவால் மின்சார வியாபாரக் கம்பெனியார் நீண்ட காலத்திற்கு ஒப்பந்தம் செய்துகொண்டு, உயர்ந்த கட்டணங்களே விதித்து அளவற்ற லாபத்தை அடைந்து விட்டனர். இது மின்சாரம் உபயோ கிப்பவர்களுக்கும் நகரின் பொது ஜனங்களுக்கும் ஒரு பெரிய கஷ்டம. - பொறுப்புக்கள் - ஆரம்பக் கல்வி ஸ்தல ஸ்தாபனத்திற்குரிய விசேஷப், பொறுப்பாகும். ஆயினும் பொதுமக்களின் அறிவின்மையை நீக்க ஏற்பாடு செய்வது முக்கியமான தேசிய விஷயமானதால் அந்த விஷயமான செலவில் ஒரு பகுதியை மத்திய அரசாங் 104