பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் பலமடைந்து பெரும்பான்மைக் கட்சியினராக மாறலாம். இம்மாறுதல் வெறும் கட்சிச் சண்டையால் வருவதன்று : திறமை வாய்ந்த விவாதங்களாலும் விஷய ஆராய்ச்சியாலும் ஏற்படக் கூடியது. காட்டிலும் சட்ட சபையிலும் அரசியல் விஷயமாக இத்தகைய பிரசாரம் நடைபெறுவதனால் பொது ஜனங்கள் அரசியல் நிகழ்ச்சிகளில் சிரத்தை கொள்கிருர்கள். அவர்களுடைய அபிப்பிராயம் உபயோகமுள்ள உருவத்தை அடைகிறது. இத்தகைய நிகழ்ச்சிகள் ஜனநாயகக் கொள் கையின் பெருமையை யாவரும் உணர்வதற்குத் தக்க சாதன் மாகின்றன. - - - - - பொதுஜன அபிப்பிராயம் என்று இப்போது சொல் கிருர்களே, அது பொதுஜனங்களின் சம்பந்தமுள்ளதே அன்று; பொதுஜன அபிப்பிராயமும் அன்று' என்று பல குசும அரசியல்வாதிகள் கருதுகின்றனர். முன்னே விவரித் துச்சொன்ன முறைகளில் பல சுயநல ஸ்தாபனங்கள் பிரசா ரம் செய்யும் கொள்கைகளே அந்தப் பிரசாரத்தால் கவரப் பெற்று யோசனை செய்யாமலேயே பொதுமக்கள் ஏற்றுக் கொண்டு வருகிருர்கள் என்பதே அவர்களின் கருத்து. இக் கருத்தில் பெரிதும் உண்மை இருக்கிறது. பொது மக்க ளிடையே அரசியல் அறிவைப் பரப்புவதாலும், அவர்களே அவ்வப்போது எழும் அரசியல் வியவகாரங்களில் நேர்முகமா கக் கலந்து கொள்ளும்படி தூண்டுவதாலும் இந்தக்குறையை நிவர்த்தி செய்து விடலாம். பொது மக்கள் தங்கள் காலத் தையும் அறிவையும் ஆற்றலேயும் போதுமானபடி செலுத்தி அரசாங்க விஷயங்களில் சிரத்தையுடனும் திறமையுடனும் ஈடுபடுவதல்ை மட்டுமே இக்கால அரசியல் நிலைமையில் கல்ல. மாறுதல் ஏற்பட இடமுண்டு. 112