பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசின்-உற்பத்தி: அரசியலதிகார ஸ்தாபனம் எழுந்தது என்று கூறுவதாகும். இந்தக் கொள்கையின்படி மானிட் ஜாதியின் பழைய சரித் திர்த்தை இரண்டு காலப் பகுதிகளாகப் ஆ. பிரிக்கலாம். முதலாவது.அரசியலதிகாரம் :, ஏற்படுவதற்கு முந்தியது. இந்தக் காலத் , தில் மனிதரால் அமைக்கப்பட்ட சட்டத். தில்ை தடுக்கப்படாமல் இயற்கை விதிக்கே அடங்கிய இயற்கை நிலையில் மக்கள் வாழ்ந்தனர். இந்த இயற்கை கிலே நெடுங்காலம் நிலத்துகிற்க முடியாதது; அசெளகரிய மானது; ர்ேவகித்தற்கரியது. அதல்ை பூர்விக மனிதர்கள் தமக்குள் ஓர் ஒப்பந்தத்தைச் செய்து கொண்டார்கள். அதன்மூலமாக் அவர்கள் இயற்கை நிலையை விடுத்துப் பரஸ் பரப் பாதுகாப்பின் பொருட்டு ஒரு சமுதாயத்தை அம்ைத் துக் கொண்டனர். இயற்கை விதிகள் போய் மனிதர் அமைத்துக்கொண்ட சட்டங்கள் வந்தன. சமூகக் கடமை களுக்குப் பணிந்து நடப்பதல்ை மனிதன் சமூக உரிமைகளே நிரம்பப் பெற்றன். ஒரு குறிப்பிட்ட வகுப்பிலுள்ள மனி தர்களுக்குள் ஓர் அரசை ஸ்தாபிக்கும் பொருட்டு ஏற்பட்ட இந்த ஒப்பந்தத்தை ஆசிரியர்கள் அரசியல், ஒப்பந்தமென்று சொல்வார்கள். இதனேடு, ஆட்சி புரிவோருக்கும் குடி மக்களுக்கு மிடையே மற்ருேர் ஒப்பந்தமும் அவசியமா யிருந்தது. அதன்படி ஆட்சிபுரியும் பொறுப்பைச் சில குறிப்பிட்ட மனிதர்களிடம் ஒப்பித்தனர். இவ்வாறுதான் அரசாங்கம் என்பது ஏற்பட்டது. இதற்கு அரசாங்க ஒப் பந்தமென்று பெயர் வழங்கும். மேலே சொன்ன அரசியல் ஒப்பந்தத்திற்கும் அரசாங்க ஒப்பந்தத்திற்கும் உள்ள வேறுபாடு அறிதற்குரியது. முன் னது, இயற்கை நிலையில் வாழ்ந்த மக்கள் ஒரு சமுதாயத்தை அமைத்துக்கொண்டு.அரசியல் அமைப்பை உடையவராகிய செய்கையைத் தெரிவிப்பது ; பின்னது, முன்பே அப்படி, அமைக்கப்பட்ட சமுதாயத்தினர் ஒரு குறிப்பிட்ட அரசாங் கத்தை ஸ்தாபித்த செயலைக் குறிப்பது. & * இந்த ஒப்தேக் கொள்கையின் சரித்திரத்தைப்பற்றி 1 .