பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் டில் அமைதியை நிலை நிறுத்தவும், அரசுக்கு உரியவை என்று பொதுவாகப் கூறப்பெறும் ஊழியங்களைக் குடி மக்களுக்குச் செய்துவரவும், சர்வதேசச் சட்டப்படியும் சம்பிரதாயப்படி யும் மற்ற நாட்டு அரசுகளுடன் உறவு கொண்டாடவும் ஒர் அரசால் ஏற்படுத்தப்பெற்ற ஸ்தாபனமே அரசாங்கம் என் பது. அரசாங்கத்திற்குரிய அதிகாரம் அனைத்தும் அரசினிட மிருந்து கிடைத்ததே. அரசின் அதிகாரத்தை வகித்து நடத் தும் ஒருவரோ சிலரோ அரசாங்கத்தின் உருவமாக இருப் பார்கள். அரசாங்கம் என்ற சொல் அதிகாரப் பதவியில் இருப்போர்களைக் குறித்து வழங்குகிறது. எனவே அரசு என்பது பொது மக்களின் மனத்தால் உணரப்படும் அரூப மான ஒன்று ; அரசாங்கமோ ஒர் உருவமுள்ளது. சந்தர்ப்பத் திற்கேற்றபடியோ, புரட்சியின் பயணுகவோ ஓர் அரசாங்கத் தின் தன்மை மாறலாம்; அரசாங்கமாக இருந்து அதிகாரம் வகிப்போர் ம்ற்றவர்களால் நீக்கப்பெறலாம். ஆனல் அரசாங் கம் மாறினலும் அரசு மாத்திரம் முன்போலவே நிலையாக கடைபெறும்; அரசின் நிலையில் மாறுதல் ஏற்படுவதில்லை. . நான்காவதாக அரசுக்கு அமையவேண்டுவது சர்வாதி ாரம்; தனியாணையென்றும் சொல்லலாம். மற்றச் சங்கங் - களுக்கும் அரசுக்கும் உள்ள முக்கியமான $ வித்தியாசத்தை இதல்ை உணர்ந்து கொள் ளலாம். சமூக ஒழுக்க விதிகளே. நிறுவி அவைகளே நிறை வேற்றவும், தன் எல்லைக்குள் வசிக்கும் எல்லா மக்களின் செயல்களுக்கும் வழிகாட்டிக் கண்காணித்து வரவும் அரசுக்கு அதிகாரம் உண்டு. வெளிகாட்டு அரசுகள் சம்பந்தமாக எத் தகைய ஆதிக்கத்திற்கும் உட்படாமல் சுயேச்சை கொண்டி : ருப்பதே ஒர் அரசின் சர்வாதிகாரத் தன்மைக்குப் பயன். இந்த இலக்கணத்தின்படி பார்த்தால் இந்தியாவிலுள்ள மைசூர், ஹைதராபாத் முதலிய சுதேச ஸம்ஸ்தான்ங்களே அரசு என்று சொல்வது பொருந்தாது. அந்த ஸ்ம்ஸ்தா னங்களை ஆளும் மன்னர்களுக்கு அவரவர் உள்நாட்டு விஷ யங்களில் பூர்ண அதிகாரம் இருந்தாலும், வெளிநாடுகளுடன் உடன்படிக்கைகள் செய்து கொள்ளவோ சட்டங்கள் இயற் சர்வாதிகாரம் 24