பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தற்கால அரசின் சிறப்பியல்புகள் றவோ உரிமை இல்லை; அத்தகைய செயலுக்கு வைசிராயின் சம்மதம் வேண்டும். ஆதலின் ஜனத்தொகுதி, தேசம், அர சாங்கம் என்ற மூன்று லக்ஷணங்கள் அவைகளுக்கு அமைக் திருந்தும், சர்வாதிகாரம், என்ற நான்காவது லக்ஷணம் யைப் பெறவில்லை. . . . ・・。 一 、。。 s இவற்றைக்கொண்டு அரசு எத்தகைய தென்பதைச் கருங்கச் சொன்னல், பிறரை அடக்கிச் சில் விதிகளுக்குக் கீழ்ப்படியும்படி செய்யவும், சண்டை சமாதானம் என்பவற் றைத் தீர்மானம் செய்யவும், பிறநாடுகளுடன் உறவு கொள் ளவும் அதிகாரம் படைத்து, அரசாங்கத்தின் கட்டுப்பாடுக ஞக்கு உட்பட்டு, ஒரு தனிப்பட்ட தேசத்தில் வசித்துவரும் மக்கட் கூட்டமே அரசு ஆகும் என்னலாம். சமூகம், அரசு, அரசாங்கம், தேசம், தேசியம், ஜாதி, முதலிய பதங்கள் இக்காலத்துப் பத்திரிகைகளிலும்புத்தகங். களிலும் அரசியல்வாதிகள் பேச்சிலும் ஒன்றுக்கொன்று. வித்தியாசமின்றி வழங்குகின்றன. ஆனல் அப்பதங்களில் ஒவ்வொன்றும் அரசியல் நூலில் ஒவ்வோர் அடிப்படையான் விஷயத்தையே குறிக்கின்றது. ஆதலின் அந்தச் சொற்க ளின் பொருளே ஆழ்ந்து ஆராய்ந்து அவற்றின் கருத்தைத் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும். சமூகம் அல்லது சமுதாய மென்பது ஜனத்தொகுதியைக் குறிக்கும். அரசு என்பதற்ை பெறப்படும் பொருளைக் காட். . டிலும் அதன் பொருள் விரிந்தது. ஜன. ట్రాల్డ్ర சமூக மென்பது மக்கள் அரசியல் சம்பந்த . . . . . . . . மாக இணைந்து வாழும் கூட்டமென்பதை மாத்திரம் குறிப்பதன்று; மதம், குடும்பம், கைத்தொழில், கல்வி முதலிய வாழ்க்கைக்கு இன்றியமையாத விஷயங்க ளில் அவர்களுக்குள்ள சம்பந்தங்களும் அவர்களின் கூட்டுற வில்ை விளையுஞ் செயல்களும் அடங்கும். அரசு ஜனசமூகத்தை ஒன்றுபடுத்துகிறது. அரசின், ஆதரவு இல்லையேல் ஜனசமூகம் நிலைபெருது. ஜனசமூகத்தை அநேக பல்கைகளைக் கொண்டு இணக்கிப்ப்ெற்ம்ம்ரப் பி. 35