பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை

(முதற் பதிப்பு).

 வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு துறையிலும் ஓரளவு அறிவு பெறவேண்டியது பொது மக்களுக்கு அவசியமாகும். பெரிய ஆராய்ச்சிகளின் நுணுகிய போக் கிலே அவர்கள் யாவரும் ஈடுபடா விட்டாலும் தினந்தோறும் பழகிவரும் பொருள்களைப் பற்றியும், ஒவ்வொரு நாளும் கேள்வியுறும் விஷயங்களைப்பற்றியும் அறிந்தால் அவர்கள் வாழ்க்கையில் மேலும் மேலும் இன்பமும் திறமையும் உண் டாகும். இந்த அடிப்படையான அறிவை வளர்க்கப் பாடு படுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டது சென்னைப் புஸ்த காலயப் பிரசார சங்கம்.
சாதாரண ஜனங்களுக்கும் விளங்கும்படியான முறை யில் விஞ்ஞான சாஸ்திர விஷயங்களேயும் அர்சியல் நூற் செய்திகளையும் உணர்த்தும் புஸ்தகங்களை இச்சங்கம் வெளிப் படுத்தி யிருக்கின்றது. விடிந்தெழுந்தால் மந்திரிசபைகளின் மாற்றங்களையும் அரசாங்க மாறுபாடுகளையும் பற்றிய புதிய புதிய செய்திகள் காதில்விழும் இக்காலத்தில் அரசியலைப் பற்றி அறிந்து கொள்வதற்குரிய புஸ்தகங்கள் பல வேண் டும். இதற்குமுன் முக்கிய அரசியல்-திட்டங்கள் என்ற நூல் இச்சங்கத்தின் ஆதரவில் வெளிவந்தது. அந்தப் புஸ்தகத்தை எழுதியவராகிய பூரீ 5. ரா. சுப்பையர் எம். ஏ., எல். டி. அவர்களும், பூநீ வித்துவான். கி. வா. ஜகந்நாதன் в. о. L. அவர்களும் சேர்ந்து இந்நூலே எழுதியிருக்கிருர்கள். புஸ்தகா லயப் பிரசார சங்கத்தின் நோக்கத்திற்கு இணங்க அமைந்தர்" இதனே வெளியிட இச்சங்கம் ஏற்றுக்கொண்டது. + . .
இதனே எழுதிய ரீ க. ரா. சுப்பையரவர்களுக்கும் புரீ கி. வா. ஜகந்நாதனவர்களுக்கும் இதற்கு ஒரு முன்னுரை எழுதியுதவிய, சுதேசமித்திரன் ஆசிரியர் ரீ ஸி. ஆர். ரீகி வாஸனவர்களுக்கும் இச்சங்கம்தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது. - .