பேராசிரியர் சேதுப்பிள்ளையவர்கள்........ igo
களேயுமே ஆரவாரமின்றி ஆக்க வேலையில் செறித்த பெருமை அவர்கட்கு உண்டு. அரசியல் இயக்கம் எதிலும் பங்குபற்றும் விழைவு பேராசிரியர் அவர்கட்கு எப் போகம் இருந்தது இல்லை. ஆயினும், ஆங்கில ஆட்சியை அவர்கள் மனமார வெறுத்த உண்மை, அவர்தம் கட்டுரை களால் இனிது புலனுகும். ஒரு சான்று:
{{
- చి
'கவிஞர்:
’காலெட் என்பது அவன் பெயர். பேராசை பிடித்த அவ்வெள்ளையன் சென்னையிலே தன் பேரை நிலைநாட்ட ஆசைப்பட்டான். திருவொற்றியூரில் ஒரு பேட்டையை உண்டாக்கினன். காலெட்பேட்டை என்று அதற்குப் பேரிட்டான். அதைக் காலாடிப்பேட்டையாக்கிவிட் விட்டார்கள் அவ்வூர் மக்கள்.
மனைவி: 'வெள்ளையர்கள்மீது சென்னை மக்களுக்கு உள்ள வெறுப்பு இதனுல் வெளிப்படுகிறதே!”
భీణ్ణ జ్ఞాఖీ இ
மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் நிறைந்த பேராசி ரியர் அவர்கள் கட்டுரைகளில், ஆங்காங்கே அழகிய கற் பனைகளும் அணிசெய்யக் காணலாம். கால்டுவெல் ஐயர் சரிதத்திலிருந்து ஒரு சான்று வருமாறு:"
"இங்ங்னம் கலத்திற் கலைபயின்ற கால்டுவெல் ஐயர் தனியராய்த் தம் அறையிலமர்ந்திருக்கும் பொழுது கண்ணுக்கடங்காத கருங்கடலின் நீர்மையை எண்ணி மகிழ்வார்; கலஞ்செல்லும் நெறியில் மீன்கள் துள்ளி
57. அலையும் கலையும்(1958), பக்.29. 58. கால்டுவெல் ஐயர் சரிதம் (1934) பக். 7.