பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் சேதுப்பிள்ளையவர்கள்........ 213

உலகிற்குத் தெளிவுபடுத்தியது. சுருங்கச் சொல்லின், பெரியதொரு தமிழ் மறுமலர்ச்சியைப் பேராசிரியர் ரா.பி.சே அவர்களின் எழுத்துகள் தமிழ் மக்கள் இதயத் தில் தோற்றுவித்தன எனலாம். தமது பெயருக்கேற்ப முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் சிறந்த தொரு சேது"வாய் அமைந்த பேராசிரியர் படைத்த நூல்களால், இன்று தமிழன்னை பெற்றுள்ள தோற்றமும் ஏற்றமும் பெரிய-மிகப் பெரிய கார்காத்த வேளாளர் குடியில் பிறந்த பேராசிரியர் அவர்கட்கு, இத்தலைமுறை யில் தமிழ்ப்பயிர் காத்த பெருமை உறுதியாக உண்டு. கலைபயில் தெளிவும், கட்டுரை வன்மையும்' மிக்க சொல்லேருழவராகிய அவர்கள், வேலி ஆயிரமாக வித்தி விளைந்த கலையுணர்வுகளின் விளையுளை, இன்னும் பல தலைமுறைகட்குத் தமிழினம் உண்டு மகிழ்ந்து உய்யும்.

(இ)

பண்பு கலன்கள்

புலமையிலும் சிறந்த பண்பு :

பதினைந்து ஆண்டுகட்கு மேலாகப் பேராசிரியர் அவர் களிடம் மாணவனுய் நெருங்கிப் பழகும் பெறலரும் பேற் றினைப் பெற்ற இக்கட்டுரையாளனுக்கு, அப்பெரியாரின் ஆழ்ந்த புலமையினை அளவிட்டுரைத்தல் எவ்வளவு அரியதோ, அதனினும் அரியது அப்பெருந்தகையின் பண்பு நலன்களை அளவிட்டுரைத்தல் புலமையினும்

90. பவணந்தியார் வாக்காகிய இச்சொற்ருெடர் பேரா சிரியர் அவர்கட்கு மிக விருப்பமான ஒன்று: அடிக் கடி அவர்களால் எடுத்து ஆளப் பெறுவது.