பதிற்றுப்பத்துள் மூன்ரும் பத்து 33
றிப் பாதுகாப்பதில் கண்ணுங் கருத்துமாய் இருந்தனர். அவர்கள் ஆ காத்து ஒம்பிய அழகினைப் பாலைக் கெளதம னர் தம் பாடல்களில் சிறப்பாகப் போற்றியுள்ளார்.'
எருது:
நன்கு போற்றி வளர்க்கப்பட்ட நல் எருதுகளைப் பழந் தமிழ் மக்கள் வண்டிகளிற் பூட்டி வெளிச் செல்வர். அது போழ்து வண்டியின் உருளி சேற்றில் சிக்கிக்கொள்ளு மேல் மாட்டாது மடங்கிப் படுக்கும். ஏனை வலியில்லாத எருதுகளைப் போலல்லாது தம் வன்மை முழுதும் செலுத்தி மூக்கொற்றியும், தாளுன்றியும் அள்ளற் சேற்றினின்றும் நீங்க வலிக்கும் முயற்சியுடையன அவ்வெருதுகள்."
ைேரயா :
மரையா பெரிதும் காடுகளிலே வாழும் தன்மையன: பெரிய தோற்றம் உடையன; இணை இணையாகக் காட்சி அளிப்பன.”
கழுதை :
பண்டு பகைவர் புலங்களை ஏர்பூட்டி உழுவதற்குக் கழுதைகளைப் பயன்படுத்தினர்!
ត្f ៖
பாழ் இடங்களில் கவர்த்த வழிகளில் இருந்து பிணந் தின்னும் வெள்ளிய குறுநரிகள் பசியால் ஊளையிட்டுக் கூவும்."
பதிற்றுப்பத்து, 21 : 21. (ii) பதிற்றுப்பத்து, 22 15, 2, பதிற்றுப்பத்து, 27 : 1.3. 3. பதிற்றுப்பத்து, 23 : 14. 4. பதிற்றுப்பத்து, 22 : 35,