பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

105


எண்ணிக் கவலையுற வேண்டியுள்ளது. ஆரியப் பார்ப்பனர்கள் வித்திய நச்சு மரங்கள் பன்னூறு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் துளிர்விடத் தொடங்கியுள்ளன. அவர்கள் பின்னிய மதவலைகளும், ‘சாதி'க் கண்ணிகளும் மீண்டும் மக்களிடையே பரப்பப்பெற்று வருகின்றன. ஓயாத பெருமுயற்சி, ஒழியாத அழிவுவேலை, இங்குள்ள கோயில் பார்ப்பான் முதல் தில்லி, அரசியல் பார்ப்பான் வரை வரிந்து கட்டிக்கொண்டு தங்கள் ‘வேத’ ‘புராண’ ‘இதிகாசங்'களை யெல்லாம் காத்தே தீர்வதென்றும், தங்கள் புளுகுரைகளுக்கு எவ்வாறேனும் அரண்கட்டியே முடிப்பதென்றும் முயன்று வருகின்றனர். இத்தகைய முயற்சிகளுக்குத் துணையாக நிற்பவர்களுள் திருவாளர் கிருபானந்தவாரியையும், பூரி – சங்கராச்சாரியையும் பற்றி ஒருசில கூறுவோம்.

வாரியார் தமிழர்; மதப்பித்தர்; ஆரிய அடிவருடி முருகன் பெயரால் ஆரியப் பார்ப்பனர்களின் பொய் புரட்டுகளுக்கு உரமேற்றிக் கொண்டிருப்பவர். ஊர்தோறும் பார்ப்பனர்களும் பார்ப்பன அடிமைகளும் கொடுக்கும் பெருஞ்செல்வத்தால் தின்று கொழுத்துத் தெருத் தெருவாய் நின்று கதைபாடி ஊரைக் குட்டிச் சுவராக்கி வருபவர். புனிதக்கதைகள் என்ற பெயரில் ஆரவார அருவருப்புகளை ஒன்றுமறியா ஏழை மக்கள் மனங்கொள்ளுமாறு நயமும் நகைச்சுவையும் தோய்ந்த தழுதழுத்த குரலில் அன்றாடம் சொல்லிச் சொல்லி இத் தமிழகத்து மக்களையெல்லாம் பார்ப்பனப் பயிர்களுக்கு உரமாக்கி வருகின்றவர். இவரைப் போன்ற தமிழர் அரசியல், கலை, வாணிகம், அரசினர் அலுவர்கள். போன்ற எல்லாத் துறைகளிலும் உளர். அவ்வத் துறைகளிலும் வல்ல வீடணப், பிரகலாத, பக்தவத்சல, சுப்பிரமணியன்கள் ஒவ்வொரு நாளும் தந்தத் திணிப் பகைகளை நிரப்பப் பார்ப்பனத் திருவேலைகளை மறவாமல் செய்து வருகின்றனர். பார்ப்பனர்களுக்குத் துணைநிற்கும் இக் காட்டிக் கொடுப்பான்களாலும் குயக்கொண்டான்களாலும் ஆரியம் மீண்டும் தலைதூக்கி வருவது தமிழகத்திற்கு மட்டுமன்றி இவ்விந்திய நாட்டிற்கே பெருங்கேட்டை உண்டாக்கப் போகின்றது. ஆரியப் பார்ப்பனத் தலைவர் இராசாசி ஒன்றிலும் ஈடுபடாமல் பற்றற்ற துறவிபோல் இருந்து இத்தனை முயற்சிகளுக்கும் எருவிடுவோராகவும் இயக்குநராகவும் இருந்து பழந்தமிழ்க் குமுகாயத்தையே அழிக்கக் காலம் பார்த்திருப்பதுடன் இவ்விந்திய நாட்டையே அடிமை கொள்ளத் திட்டமிட்டிருக்கின்றார். “வர்ணானாம் ப்ராஹ்மணே குரு” என்றபடி அவர் பார்ப்பனர்க்கு மட்டுமன்றி இந்துமத வெறியர் . எல்லார்க்குமே அரசியல், இனத் தலைவராக உள்ளார். தமிழர்க்கும் . பிற இந்தியர்க்கும் தன்மானம் குன்றி இருப்பதால் அவர்கள் இப்