பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


தவறி எங்கோ ஒருவன் கைதுக்கிவிட்டாலும், அவன் தலைமேலேயே நாம் ஏறி நிற்க விரும்பினோமேயன்றி, அவனுக்கு நன்றியுணர்வு காட்டி அவனை மதித்துப் பாராட்டியதில்லை. சில வேளைகளில் அவனுக்கே நாம் குழிதோண்டி வைக்கவும் தவறியதில்லை. புறம் பேசுவது நம்மிடையில் மிகுதி. இதை நேரிடையாக ஒருவன் கேட்பானானால் அவனையே அக்குற்றத்திற்கு ஆளாக்கிவிட்டு, அவனை விட்டுப் புறம்போதலும் நம்மவரிடையே மிகுதி. நேருக்கு நேராய் வாய்திறக்க நம்மவருக்கு இன்னும் துணிவு வரவில்லை. நம் குறைகளாகவும் நாம் கூறிக்கொண்டிருக்கும் வரை, நாம் ஓர் இம்மியளவும் முன்னேறப் போவதில்லை. இப்பொழுது முன்னேறியுள்ளதாக நாம் கருதிக் கொண்டிருப்பதும் நம் முன்னேற்றமில்லை. ஆற்று வெள்ளத்தில் தப்பித் தவறி வீழ்ந்து அடித்துச் செல்லப்படும் மரக்கட்டைகளைப் போல் நாம் எங்கோ அடித்துச் செல்லப்படுகின்றோம். நம்மில் திறமையான ஒருவனை அவன் பெற்ற அத்திறமையான அத்துறையில் பயன்படுத்திக் கொள்ள மறுக்கின்றோம். நம் எல்லாரையுமே எல்லாத் துறைகளிலும் அறிஞர்கள் என்று கூறிக்கொள்ளும் பேராசை நம் அனைவருக்கும் இருக்கின்றது. சிறிது அளவில் கற்ற மட்டிலேயே பேரளவில் பேச மேடைபோட்டுக் கொள்ளுகின்றோம். ஒரு பக்கங்கூடப் பிழையின்றி எழுத வராத குரும்பைகளெல்லாம் இன்று எழுத்தாளர்களாகவும் கலை மேதைகளாகவும் உலாவரக் காண்கின்றோம். பதவி, அதிகாரம் இரண்டால் அறிவுலகத்தையே ஆளத் துடிக்கின்றோம். தமிழர்களாகிய நமக்கு வாய் நீளம்; கை மிக மிக நீளம். பிசிறு அடிக்கின்ற கருத்துரைகளையெல்லாம் துல்லிய நேர்கோடுகளாகக் காட்டிவிடப் பொழிந்து தள்ளுகின்றோம். வள்ளுவருக்குப் பின் உலகனைத்தையும் இணைத்து நோக்கிய தமிழறிஞர் ஒருவரையும் என்னால் பார்க்க முடியவில்லை.

ஆரியப் பார்ப்பனர்களை அடியூன்றத் திட்டித் தீர்க்கும் ஒரு தன்மானச் செய்தித்தாள் (பெயர் சொல்ல விரும்பவில்லை) ஆசிரியரிடம் ஒருபால், தென்மொழித் தாள் சலுகைக்கென நான் கையேந்திப் போன நாட்களில் அவர் தமக்கு அதுபற்றி ஒன்றும் தெரியாதெனக் கூறியதை, இன்றும் எண்ணிப் பார்த்து, நம்மவர்க்கு வரவேண்டிய பொதுமை உணர்வுகளுக்காக என்னைத் தீய்த்துக் கருக்கிக் கொண்டிருக்கின்றேன். இந்த நிலை இன்னும் சிறுஅளவில் கூட நம்மைவிட்டு நீங்கியபாடில்லை. பாவேந்தர் பாரதிதாசனைப் பற்றி மேடைதோறும் பாமுழக்கும் ஓர் அமைச்சர், தமக்குப் பதவி வந்தபோது, அவரை அணுகிய பாவேந்தர் பெயரனுக்கு மருத்துவக்