பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

131


பொதுவுடைமை நாடுகளில் மதங்களுக்கு இடம் கொடுத்தாலும் அரசாளுமையில் அவற்றைத் தலையிடா வண்ணம் தடைப்படுத்தியுள்ளனர். அதனால்தான் அவர்களால் பல நல்ல விளைவுகளைச் செய்ய முடிகின்றது. ஆனால், அவ்வாறு இவ்விந்திய நாட்டின் சட்டம் அமையாமைக்குக் கரணியம், இதனை உருவாக்கிய எழுவரில் ஐவர் பார்ப்பனர். எனவே, தங்கள் வாழ்க்கையின் எல்லாக் கூறுபாடுகளுக்கும் மதமே துணையாக இருக்கின்ற அந்தத் தன்மையினை அவர்கள் சட்டத்தினின்று விலக்கிவிட முடியாமற் போனதுடன், அந்தச் சட்ட அமைப்புகளாலேயே அம் மதக் கோட்பாடுகளைக் காப்பாற்றவும் செய்துவிட்டனர். ஆகவேதான் இந்த நாட்டில் மதத்தின் பெயரால் ஒருவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; எப்படி வேண்டுமானாலும் பிழைக்கலாம். நாளைக்கு, இதே இந்திராகாந்தி மக்களிடத்தில் வேடிக்கையாகப் பேசித்திரியும் நிகரமைக் கொள்கைகள் ஒருவேளை செயல்முறைக்கு வந்தாலுங்கூட அவற்றைச் செயற்படுத்த முடியாமல் தடுக்கின்ற வல்லமை இந்த மதக் கோட்பாடுகளுக்கு உண்டு; அவற்றுக்குச் சட்டக் காவலும் உண்டு. எனவே, இந்த ஒன்றை வைத்தே அந்த அம்மையாரின் பேச்சுகளில் எத்துணையளவு உண்மையிருக்கும் என்றும் எடையிட்டுக் கொள்ளலாம். அந்த அளவுக்கு இந்த நாட்டின் சட்டம் இங்குள்ள மதங்களுக்கு – குறிப்பாக இந்துமதத்திற்குக் காவலாக்கப்பட்டுள்ளது. எனவேதான் எத்தனைப் பொதுவுடைமை சமவுடைமைக் கொள்கைகள் – முழக்கங்கள் வந்தாலும் இங்குள்ள தீமைகளை ஓர் இம்மியளவும் பெயர்த்துக் காட்ட முடியவில்லை. இந்தியச் சட்ட அமைப்பையே உடைத்துத் தூள்தூளாக்கும் கொள்கையை எந்தக் கட்சி கொண்டுள்ளதோ அதுதான் இந்த வகையில் ஓரளவு உண்மையான – நம்பிக்கையுடைய கட்சியாக இருக்க முடியும். அவ்வாறு இங்குள்ள ஒரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருப்பதாகச் சொல்ல முடியாது.

எனவே, இங்குள்ள மதக்கோட்பாடுகளுக்கு மாறாக எத்தனை எழுதினாலும், பேசினாலும், முயன்றாலும் எதனையும் செயலாக்க முடியாமல் போய்விடுகிறது. இந்த நாட்டைத் திருத்துவதற்கும், இங்குள்ள தீமைகளை ஒழிப்பதற்கும் இங்குள்ள கட்சிகள் தலைவர்கள் பேசுவதைப் போல், இங்குள்ள தாளிகைகள் எழுதுவதைப் போல், உலகில் உள்ள வேறு எந்த நாட்டிலும் ஒரு முயற்சி நடைபெறவில்லை. அங்கங்குள்ள கட்சிகளும் குறைவு; தலைவர்களோ அதைவிடக் குறைவு; அவர்கள் பேசுவதோ அதைவிடக் குறைவு; அவ்வாறு பேசும் செய்திகளும் அந்தந்த நாட்டின் முன்னேற்றத் திட்டங்களைப்