பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


பொருள்களையெல்லாம் கற்பித்துக் கொண்டு, தாளைத் திரியாக்கிக் காசைக் கரியாக்கி, விலைமதிப்பற்ற மருந்தைப் புகையாக்கி, நம் காதுகளையும் புண்ணாக்கிக் கொள்ளுதல் வேண்டும்? இதில் என்ன மெய்ப்பொருள் இருக்கிறது? எந்தப் புதுப் பெரியவாளாவது ‘தென்மொழி’ அலுவலகத்திற்கு வந்து விளக்கிக் காட்ட முடியுமா? அல்லது, அரசியல் பொருளியல் போலும் பெரிய பெரிய இதுகளுக்கெல்லாம் தொடர் கட்டுரைகளில் விளக்கம் போட்டுக் காட்டும் தினமணிச் சிவராமன்கள் வந்தாவது விளக்கிக்காட்ட முடியுமா? இந்தக் காலங்களில் தொழிலாளர்களிடத்தில் எழும் வெகுமதிப் போராட்டங்களும், அவற்றால் தொழிலகங்கள் இழக்கும் வருமானங்களும், அவற்றைப் பிடுங்கக் காத்திருக்கும் வாணிகக் கள்ளர்களும், இவர்கள் அத்தனைப் பேருடைய நடைமுறைகளுக்கும் அனுப்பிசகாமல் ஆண்டுதோறும் இசைவளித்துவிட்டு, அவ்வப் பொழுது அமெரிக்காவிற்கும் உருசியாவிற்கும் வெட்கமில்லாமல் மடியேந்திப் போகும் ஆட்சி மூடர்களுக்கும் யார் வந்து அறிவு கொளுத்துவது...? – இஃது என்ன அப்படி முழுக்க முழுக்கவா நடுவணரசைப் பொறுத்த செய்தி.... ?

அது போகட்டும்! நம்(!) அமைச்சர்களைக் கேட்கின்றோம். கலைமகள் விழா, திருமகள் விழா, கருவிவிழா என்றெல்லாம் அரசு அலுவலகங்களில் கொண்டாடுவதற்காகப் பிய்த்துப் பிடுங்குகிறார்களே, அவையெல்லாம் நம்(!) ஆட்சியிலுங்கூடக் கட்டாயம் அரசு அலுவலகங்களில் கொண்டாடப்படத்தான் வேண்டுமா? – இப்படி நீங்கள்தாமே அன்றைக்குக் கேட்டீர்கள். இப்பொழுது நீங்களே கொண்டாட விடுகிறீர்களே! (நீங்கள் கொண்டாடுவது ஒருபுறம் இருக்கட்டும்!) அதுமட்டும் ஏன்? இவற்றைக் கொண்டாடுவதை விட்டுக் கொண்டிருந்ததற்காகத்தானே அன்றைய பேராயக்கட்சியை வடநாட்டானுக்கு வால்பிடிக்கும் கட்சி என்று பகடி செய்தீர்கள்? இன்றைக்கு உங்களை யார் பகடி செய்வது? ஒருவேளை இதற்கும். அந்த மாநிலத் தன்னாட்சி (அப்படிச் சொன்னாலும் உங்களுக்கு விருப்பம் இருக்காது) இல்லை – மாநில சுயாட்சி வாங்கியாக வேண்டுமோ? இதையெல்லாம் கண்டித்தால், நாம் நம்(!) அண்ணாவிற்கும் நம்(!) பெரியாருக்கும் விழா – வேடிக்கைகள், தீவ, தூவ, படைப்புகள் செய்ய முடியாது? (மக்களைக் கண்ணுக்குக் கண்ணாக ஏமாற்ற முடியாது; வேண்டுமானால் மறைமுகமாக ஏமாற்றலாம்;) எனவே அவர்கள் கொண்டாடும் விழாக்களை அவை – கருவிப் பூசனையாகட்டும், கலைகள், திருமகள் பூசனையாகட்டும் நாம் விட்டுக் கொடுப்போம்; அப்பொழுதுதான்