பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

139


இதைக் கல்வியமைச்சர் நெடுஞ்செழியனார் கவனிக்க வேண்டும். அவர் பேசிய பேச்சு ஒருவகைப் பொருள் தருவதானாலும், அவர்கள் அச்செய்தியால் என்ன விளைவை ஏற்படுத்த விரும்புகின்றனர் என்பதைத்தான் அமைச்சர் கவனிக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.

அந்தச் செய்தியைத் தினமணி வெளியிட்ட முறையைப் பாருங்கள்.

தமிழ் மொழியில் அந்நியச் சொற்கள்!

த.நா. கல்வி மந்திரி வரவேற்கிறார்.

நாகர்கோவில், சூன். 10 – விஞ்ஞானம், தொழில்நுட்பம் போன்ற பாடங்களை போதிக்கும்போது, தமிழ்மொழியில் அன்னிய மொழி வார்த்தைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று த.நா. கல்வி இலாகா மந்திரி நெடுஞ்செழியன் இன்று அ,இ. பல்கலைக் கழகத் தமிழ் ஆசிரியர்கள் சங்கத்தின் மாநாட்டை ஆரம்பித்து வைத்துப் பேசுகையில் கூறினார். –

தமிழ் இலக்கணம், இலக்கியம் முதலியவைகளை மேற்கொண்டு அபிவிருத்தி செய்யவேண்டிய அவசியமில்லை. தமது மொழிகளை மேலும் வளப்படுத்துவதற்காக, ரஷியாவும், ஜப்பானும், விஞ்ஞான தொழில் நுட்பத் துறைகளில், பிற மொழி வார்த்தைகளை சேர்த்துக் கொண்டிருக்கின்றன. அந்த உதாரணத்தை நாமும் பின்பற்ற வேண்டும் என்றார். அதேசமயத்தில், விஞ்ஞானம், கணிதம் மற்றும் இதர பாடங்களைத் தாய்மொழியிலேயே கற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் அவர் வற்புறுத்தினார்.

– இதுதான் தினமணிச் செய்தி.

– இதில் இனி கவனிக்க வேண்டியவை இவை:

1. கல்வியமைச்சர் பேசிய கருத்து "அறிவியல் சொற்களைத் தமிழில் அப்படியே கையாளலாம்” என்பதேயாகும். ஆனால் அக் கருத்தைத் "தமிழ்மொழியில் அந்நியச் சொற்கள்” என்று தலைப்பிட்டுத் தமிழில் கலப்புச் செய்வதை அமைச்சர் வரவேற்பது போல் காட்டியது ‘பார்ப்பனக் குறும்பு’.

2. பிறமொழிச் சொற்கள் என்பதை அந்நியச் சொற்கள் என்று வேண்டுமென்றே எழுதியது ஆரியக் குறும்பு!

3. கல்வி அமைச்சர் என்று எழுதுவதை (மந்திரி என்பது