பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

141


போகட்டும்; அந்தமட்டில் விட்டதுகளே! ‘அன்னிய பாஷை’ – என்றெழுதாமல்! அந்த அளவுக்கு நமக்கு வளர்ச்சிதான். அது சரி, நம் தி.க.காரர்களும், தி.மு.க.காரர்களும் இன்னும் ‘அவாள்’ கருத்துப்படி ‘பாமரர்கள்’ தாமோ? அப்படி நாங்கள் இல்லை’ என்று அவாள் உச்சிக் குடுமியில் உரைக்கும்படி சொன்னால் என்ன? ஓ....... ஓ....... உச்சிக் குடுமி இருந்தால்தானே!

9. இனி, சொற்கள் என்றால் நம்மவாளுக்குத் தெரியாதாம்; எனவே, வார்த்தைகள் என்று எழுதறதுகள் எல்லாம் நம்மவாளுக்குத் தானே, அவாள் தமிழ் எழுதறதும் படிக்கிறதும், அவாளுக்குத் தான் இங்கிலீசு இருக்கிறதே!

10. அவசியம் இன்னும் போகவில்லை. தேவை இன்னும் நமக்கு வரவில்லை. இஃது அம்மாமிக் குறும்பு!

11. கல்வித்துறை, பொதுப் பணித்துறை, காவல் துறை என்றெல்லாம் புழக்கத்துக்கு வந்து தண்ணிர்பட்ட பாடாகப் போன பின்னால்கூட, ‘இலாகா’ என்று எழுதுவதைப் பற்றி என்ன சொல்ல? இதுதான் அய்யராத்துக் குறும்பு!

12. ‘தமிழாசிரியர் கழகம்’ என்பதால் தம் ‘இப்பித்தனம்’ போய் விட்டால் என்ன செய்வது? எனவேதான், ‘தமிழாசிரியர்கள் சங்கம்’ என்று எழுதுகிறார்கள். இதுதான் துக்ளக் குறும்பு!

13. தொடக்கி வைத்துப் பேசினார் – என்று எழுதினால் தமிழ் வளர்ந்துவிடாதா? அதைக் கெடுத்துப் ‘பிராமணர் கருமத்தை’ நிறைவேற்ற வேண்டாவா? எனவேதான், ஆரம்பித்து வைத்துப் பேசினார் என்று அவாள் எழுதுவது. இது கல்கிக் குறும்பு!

14. முன்னேற்றம் என்று சொல்வதில் இரண்டு தடையிருக்கிறது, பார்ப்பனருக்கு! தமிழ் முன்னேறிவிடக் கூடாது என்பது ஒன்று! முன்னேற்றக் கழகத்திற்குப் பெருமை வந்துவிடக்கூடாது என்பது ஒன்று. இந்த இரண்டையும் எண்ணிக்கொண்டுதான், முன்னேற்றம் என்று ‘பூணூல்கள்’ சொல்வதைவிட ‘அபிவிருத்தி’ என்று சொல்வதில் தான் மகிழ்ச்சி அதிகம்.

மதுரையில் நடந்த இரண்டாவது தென்மொழிக் கொள்கை மாநாட்டைக் கூட, ‘தென்மொழி அபிவிருத்தி மாநாடு’ என்று அவர்கள் எழுதி மகிழ்ச்சியடைந்தனர். இதுதான் அவர்களின் ஆனந்த விகடக் குறும்பு!

15. ‘வார்த்தைகள்’ என்பதைச் ‘சொற்கள்’ என்று எழுதாத