பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


கருத்துகள் ஒன்றுமறியாத ஏழை எளிய மக்களை ஏமாறச் செய்வன. அவர்களிடையில் கொஞ்சம் நஞ்சமிருக்கும் அறிவுணர்வுகளையும் இழந்து போகச் செய்வன. இவர்களைத் தட்டிக் கேட்பதற்குரிய அரசியல் அதிகாரங்களோ, சட்ட அமைப்புகளோ நம்மவர்க்கு இடந்தருவனவாயில்லை. ஏனெனில், இவர்கள் தங்கள் இனநலன்களைப் பரப்பும் வகைகளுக்கு உதவியாகவே இங்குள்ள இந்துமதம் என்னும் வேத மதமும் இந்திய அரசியலமைப்பும் இருக்கின்றன. இவ்வேத மதத்திற்கு எதிர்ப்பாக இங்குள்ள தமிழர் மதங்களாக உள்ள சிவனிய மதமும் மாலிய மதமும் இணைந்து செயல்படுவதில்லை. ஏனெனில் இவ்விரு பெரிய மதங்களையும், இவற்றைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான சிறுதெய்வக் கோட்பாடுகளையும் ஏற்கனவே வேதமதமாகிய இந்துமதம் செரித்துத் தன்னுள் அடக்கி ஆட்கொண்டு விட்டது. தமிழில் ஏற்படுத்தப்பெற்ற சமசுக்கிருத மொழிக் கலப்பைப் போல், இம்மதங்களின் உள்ளேயும் புகுந்து இரண்டறக் கலந்துபோன ஆரியக் கொள்கைக் கலப்பை இவை தவிர்த்துக் கொள்வனவாயில்லை.

மேலும், இவ்விந்திய அரசும், ஏதோ எல்லா மதங்களுக்கும் சலுகைகள் காட்டுவதைப்போல, உள்முகமான கொள்கைப் பூசல்களையும் மூடநம்பிக்கைகளையுமே வளர்த்து வருகிறது. அதேபோல் வெளிப்படையாக இங்குள்ள சாதிப்பூசல்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்று போலித்தனமாகக் கூறிவந்தாலும், உள்முகமாக, எல்லாச் சாதியினர்க்கும். ஏதோ ஒவ்வொரு வகையில் சலுகைகளும் சார்புகளும் காட்டி என்றென்றும் இந்நிலத்தில் சாதிப் பூசல்கள் இருக்கும்படியும், சாதி வேறுபாடுகள் நிலைக்கும்படியும் செய்து வருகிறது. சாதிகளற்ற குமுகாயம் இருக்க வேண்டும் என்பதில் நடுவணரசுக்குக் கொஞ்சமும் அக்கறை யிருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு சாதிகள் அழிக்கப்பட்டால் பிராமணீயமும் அழிந்துவிடும் என்று அவர்கள் அஞ்சுவதாகத் தெரிகிறது. எனவே அவர்கள் மறைமுகமான பிராமணீயக் காவலர்களாகவே செயல்படுகிறார்கள். அவ்வாறு அவர்கள் சாதி வேறுபாடற்ற ஒரு குமுகாயத்தை உருவாக்க விரும்பினாலும், பிராமணியத்தை அழித்துக்கொள்ள அவர்கள் அணியமாயில்லை. பிராமணீயந்தான் இவ்விந்திய நாட்டில் என்றென்றும் தலைமையிடத்திலிருந்து செயல்பட வேண்டும் என்று அவர்கள் கருதுவதாகவும் தெரிகிறது. இதை அவர்களின் நடவடிக்கைகள், மத ஏற்பாடுகள், மறைமுகச் சட்ட அமைப்புகள் இவற்றின் வழியாக உறுதிப்படுத்தி வருகிறார்கள். இந்தியாவுக்கு விடுதலை வந்தால் பிராமணீயமும் அதன் வேரான வேதமதம் என்னும் இந்துமதமும் அழிந்துபோய்விடலாம் என்று அஞ்சியே, 1924ஆம் ஆண்டில், இந்தியாவுக்கு விடுதலை கொடுக்க வேண்டுமா வேண்டாமா என்று ஆராய்வதற்காகப் பிரிட்டிசுக்காரர்