பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


படிப்பில் சிறந்தவர்களாகவும் விளங்குவது நிரூபிக்கப்பட்டுள்ளது. சமசுக்கிருதம் ஜெர்மனி அமெரிக்கா போன்ற நாடுகளில் எல்லாம் எல்லோராலும் கற்றுக் கொள்ளப்படுகிறது. நம் நாட்டில் ஒவ்வொருவரும் சம்ஸ்கிருதம் கற்றுக்கொள்வது மிக அவசியம்.

..... விஞ்ஞான யுகமான இக்காலத்தில்கூட, ஸம்ஸ்கிருத நூல்கள் கணிதம், வான சாஸ்திரம், ஜியாமெண்டரி, டிரிகனாமெண்ட்ரி, அல்ஜீப்ரா, பூகர்ப ஆராய்ச்சி, அணு ஆராய்ச்சி, கட்டிட நிர்மாணம் ஆகியவற்றிற்கு பெரும் உதவியாக உள்ளன.....

..... எல்லா மாநில சர்க்கார்களும் உடனடியாக ஸம்ஸ்கிருதத்தைக் கட்டாய பாடமாகச் சொல்லித்தரவேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்கு நமது புராதன கலாச்சாரமானது புரியவரும்.

..... ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு சம்ஸ்கிருத நிறுவனம் ஏற்படுத்தி, மத்திய நிறுவனம், அவற்றின்மூலம் ஸம்ஸ்கிருதம் நாடு முழுவதும் பரவவும், மேல் படிப்புகளும் ஆராய்ச்சிகளும் நடத்தவும் முழு ஆதரவு தரவேண்டும் என்று மத்திய சர்க்காரை இந்தச் சம்மேளனம் கேட்டுக்கொள்கிறது.

......... தற்பொழுதைய ஹிந்து அறநிலைய அமைப்பு முழு அதிகாரமும் உள்ள அறநிலையங்கள் ஸ்தாபனம் நிறுவப்பட வேண்டும்.

.......... மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் சமயக்கல்வி சொல்விக், கொடுக்க வேண்டும் என்று கல்வி அதிகாரிகளையும் சென்னை சர்க்காரையும் இந்த சம்மேளனம் கேட்டுக் கொள்கிறது.

– எப்படி? நடுவணரசைக் கேட்டுக்கொள்ளும் தீர்மானங்கள் அல்ல இவை? நாளை நடைபெறவிருக்கும் திட்டங்கள்! இவை மட்டுமா? இன்னும் எத்தனை, எத்தனை?”

சமசுக்கிருத மொழியை அடிப்படையாகக் கொண்டு தான் பிராமண மதமாகிய வேத மதமும் அஃதாவது இந்துமதமும், பிராமணியமும் நிலைத்து நிற்கவும், வளர்ந்து ஓங்கவும் முடியும். சமசுக்கிருத மொழி அழியுமானால், பிராமணியம் இந்தியாவில் ஒரு நொடிப்பொழுதும் உயிர் வாழ முடியாது. “ஓரினத்திற் கடிப்படையாகவுள்ளது அவ் வினத்தின் மொழியே. அம்மொழி அழியுமானால்