பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

167


கொள்வதுமில்லை. அதைச் சூத்திரமொழி என்றும், நீச பாஷை என்றுமே கூறி வந்திருக்கிறார்கள்; வருகிறார்கள். மறைந்த நயன்மைக் கட்சித் தலைவர்களுள் ஒருவரும், மிகச் சிறந்த அரசியல் வரலாற்று அறிஞருமாகிய வயவர். ஏ.டி. பன்னீர்ச்செல்வம் அவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள் தேவையின் பொருட்டே தமிழைப் பயன்படுத்தினர்; அஃதாவது ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்வதைப் போல. மற்றபடி அவர்கள் சொந்த மொழியாகக் கருதுவது சமசுக்கிருதத்தையே! தமிழை விட சமசுக்கிருதமே மேல் என்பது அவர்களின் முடிந்த முடிபாகும் என்று தெளிவாகக் கூறியுள்ளார். பொதுவாக இன நிலையில் ஆரியத்தையும், மொழி நிலையில் சமசுக்கிருதத்தையும், அது முடியாத பொழுது அதற்கு முற்றிலும் இலக்கண இலக்கிய வழியில் வயப்பட்ட இக்கால் உள்ள இந்தி மொழியையுமே ஆரியப் பார்ப்பனர்களும் அவர்கள் வழி வடநாட்டினரும் தலைமைப்படுத்த வேண்டும் அல்லது அதிகாரம் கொண்டனவாக ஆக்க வேண்டும் என்று அங்காந்து திரிகின்றனர். இந்நிலையில் தமிழுக்கு இக்கால் ஏற்பட்டு வருகிற மேம்பாடுகளும், தமிழர்களிடையில் தோன்றி வளர்ந்து வருகின்ற விழிப்புணர்வுகளும் பார்த்தசாரதி போலும் படித்த – ஒரளவு பொதுமக்களிடையே விளம்பரம் பெற்ற – பார்ப்பன எழுத்தாளர்களுக்கு எரிச்சலையும் அதிர்ச்சியையும் தருகின்றனவாக இருக்கலாம். அவ்வுணர்வு வெளிப்பாட்டின் ஒரு பகுதியாகவே ‘துக்ளக்’கில் அவர் எழுதிய கட்டுரையை நாம் கருதுதல் வேண்டும்.

ஆரியப் பார்ப்பனர்களின் குணக்கேடுகளைப் பற்றி ஆயர் துபாய்சு என்னும் வரலாற்று மேலையறிஞர் தம் புகழ்மிக்க இந்துக்களின் ஒழுக்க வழக்கங்களும், வினைமுறைகளும்(Hindu Manners, customs and ceremonies), என்னும் வரலாற்று நூலில், ‘அவர்கள் பேராசை (avarice), அதிகார வெறி (ambition), வஞ்சனை (cunning), நேர்மையின்மை (Dishonest), இரட்டை நாக்கு(double tongue), ஏய்த்தல் (Fraud), முறைகேடு (Injustice), நயவஞ்சகம் (Insurwating), கள்ளத் தொடர்பு (Intrigne). கொடுமை(Oppression), இழிதகைமை (Servile), சூது (Wile) போன்ற தீய பழக்கங்களுடையவர்கள்’ என்கிறார். இத்தீக் குணங்களுள் முழுமையுமோ ஒன்றிரண்டோ இன்றுள்ள ஆரியப் பார்ப்பனர்களிடமும் காணப்படக் கூடியவையாகவே உள்ளன. எனவே, தமிழ்மொழியின் உண்மையான சிறப்பையும் அல்லது தமிழின மேம்பாட்டையும் எவ்வகையிலும் அவர்கள் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். அதனால் நாமும் பார்த்தசாரதி