பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


போலும் தமிழ்ப் படித்த பார்ப்பனர்களின் கருத்துகளையும் கவனிக்க வேண்டுவதில்லை. இனி, அவர்கள் வழி, சமசுக்கிருதத்தையும் அதன் மேலாளுமையுமே சிறப்பென்று கொண்ட வையாபுரி, மீனாட்சிசுந்தர, கண்ணதாச அடியார்களையே அவர்கள் தமிழறிஞர்கள் என்று இதுவரை ஏற்றுக்கொண்டுள்ளனர். தமிழுக்கு உண்மை ஏற்றம் கண்ட மெய்யான தமிழறிஞர்களைப்பற்றி அவர்கள் எப்பொழுதுமே காழ்ப்புக் கொண்டவர்களாகவும், எரிச்சலுற்று மறைமுகத் தாக்குதலை நடத்துபவர்களாகவும், இன்னும் முடிந்தால் அப்படிப்பட்டவர்களையே திட்டமிட்டு அழித்தொழிப்பவர்களாகவுமே இன்றுவரை இருந்து வருகின்றனர்.

இனி, பார்த்தசாரதி, தம் கட்டுரையில் சமசுக்கிருதத்தைப் பற்றி வரம்பின்றிப் புகழ்ந்து எழுதியுள்ளார். சமசுக்கிருதம் ஒர் அரைச் செயற்கைக் கலவை மொழி என்பதையும், ஏறத்தாழ கி.மு. 5–ஆம் நூற்றாண்டளவில் தோற்றுவிக்கப் பெற்ற மொழி என்பதையும், வேத கால ஆரியர் பேசிவந்த ஆரிய மொழி அழிந்து போன பின் பிராகிருதம் (வட திரவிடம்), பாலி மொழிகளினின்று தோற்றுவிக்கப் பெற்றதென்பதையும் மறைமலையடிகள், பாவாணர் போலும் மொழி வரலாற்றறிஞர்கள் நன்கு ஆய்ந்து புலப்படுத்தியுள்ளனர். இனி, பாவாணரவர்கள் சமசுக்கிருதத்தில் ஐந்தில் இரு பகுதி முழுத் தமிழ்ச் சொற்களும் ஐந்தில் இரு பகுதி தமிழ் வேரினின்று திரிந்த சொற்களும், ஐந்தி ஒரு பகுதி இடுகுறிச் சொற்களென்றும் தம் துண்மாண் நுழைபுல வன்மையால் முற்ற ஆய்ந்து முடிவுகட்டியுரைப்பார். சமசுக்கிருத அகர வரிசையில் உள்ள நால்வகை ஒலிப்புகளும் பிராகிருத மொழியில் இருந்தவையே. இக்கால் பேசப்பெறும் மணிப்பிரவாளத் தமிழில் தமிழுடன் பிராகிருதமொழிச் சொற்களே மிகுதி. சமசுக்கிருதம் பிராகிருதம் கலந்து செய்யப்பட்டதால் அவை சமசுக்கிருதச் சொற்கள் போலவே தோன்றுகின்றன.

சமசுக்கிருதம் ஒருபோதும் பேசப்பட்டதில்லை. அந்த இழுக்கைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆரியர்கள் அதால் தம் வேத மதக் கொள்கைகளை மக்கள் இழிவாகப் புறக்கணித்து விடுவார்கள் என்பதற்காக, அஃது இங்குள்ளவர்களால் அன்று, தேவர்களால் பேசப் பெறுவது என்று அதற்கு உயர்வு கூறினர். மொட்டையனைக் கேசவன் என்றும், பெட்டையனைப் புருசோத்தமன் என்றும், மூங்கையனை வாகீசன் என்றும், குருடனைக் கண்ணாயிரம் என்றும் அழைப்பது போல், இந்நிலவுலகத்து எப்பொழுதும் எங்கும் எவராலும் பேசப் பெறாத மொழியைத் தேவருலகத்துப் பேசப்